Tuesday 30 April 2013

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.

                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்க மூன்றடுக்கு அமைப்புகள் உள்ளன.
                      அவற்றில் ஒன்று மாவட்ட  மன்றம் (District forum) என்னும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் மன்றம் (Consumer Disputes  Redressal  Forum)ஒன்று.இந்த மாவட்ட மன்றம் அடிப்படையானதும்,முதன்மையானதும் ஆகும்.
                        அமைப்பும்,அதிகார வரம்பும்;-
                         ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்திருக்கும்.மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்திற்கு  மாவட்ட நீதிபதி (இருக்கிறவர்,இருந்தவர்,இருக்கத் தகுதியுடையவர்)தலைவர் ஆவார்.
                              அவருக்குக் கீழ் ஒருவரை பெண்மணியாகக் கொண்ட மற்ற இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.ஏதாவது ஒரு இளநிலை பட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப் பதிவியல்,தொழில்,பொது விவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவதுகையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும் பெற்று இருக்க இருக்க வேண்டும்.கூடுதலாக திறமை,நேர்மை,மற்றும் தகுநிலை உடையவராக இருக்க வேண்டும்.
                         மாவட்ட மன்றத்தின் உறுப்பினர்கள் அலுவலகப் பொறுப்பிற்கான ஆண்டுகாலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை இதில் எது முன்னதாக நிறைவடைகிறதோ அதுவரையில் பொறுப்பில் இருக்கலாம்.
 இழப்பீடு தொகை ரூபாய் இருபது இலட்சத்திற்கு மிகைப்படாமல் உள்ள நேர்வில் செய்யப்படும் புகார்களை மாவட்ட மன்றம் விசாரணை செய்வதற்கு அதிகார வரம்பு உடையது ஆகும்.


                 

1 comment:

  1. Enakku porul tharuvathaga sonna enterprises ippothu 2 varudangalaga maruthu varugirargal.enathu amount thirumba pera vazhi koorungal.Please send to my mail address

    ReplyDelete