Saturday 27 July 2013

சிபர்ஸ்ஆர்க்-சங்கத்தின் அடையாள வில்லை.

  மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                    

     
          சிபர்ஸ்ஆர்க் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நமது சங்கத்தின் அடையாள வட்டவடிவ வில்லை தங்களது தகவலுக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.கருத்து ஏதும் இருப்பின் consumerandroad@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
                                                நன்றிங்க.என,
                                  பரமேஸ்வரன்.சி.
                                        செயலாளர்,
                          சிபர்ஸ்ஆர்க் - தமிழ்நாடு.

Saturday 13 July 2013

தேங்காய் எண்ணெய் கலப்படம்!உஷார்!......






    
மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                   தேங்காய் எண்ணெயில் கலப்படம் பற்றி ஓர் உண்மை இங்கு காண்போம்.         கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணெய் இல்லைங்க!....

              அப்படியானால் தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்னவாக இருக்க முடியும் ?
             தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
           பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
        தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது
              மினரல் ஆயில் என்றால் என்ன ?
             பெட்ரோலியப் பொருட்களின் இறுதியான கழிவுப் பொருளே மினரல் ஆயில் என்னும்  லிக்யுட் பேரபின் ஆகும் .இந்த வகைக் கழிவு எண்ணெயினை அமெரிக்க மண்ணெண்ணெய் என்றும் கூறுவார்கள்.
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பதுமினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..
       பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்
         மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
             தோல் வறண்டு போகும்
       முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
      முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
       அரிப்பு வரும் ..
     ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்கும்
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கியாரண்டி?,வாரண்டி?.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
     இந்தப்பதிவில் கியாரண்டி மற்றும் வாரண்டி பற்றி பார்ப்போம்.



கியாரண்ட்டி என்றால் என்ன..?
வாரண்ட்டி என்றால் என்ன..?
கியாரண்ட்டிஎன்றால்உத்திரவாதம்என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டிஎன்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில்கியாரண்டிஎன்றால்பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால்சர்வீஸைக் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.
சமீபத்தில்லாப்_டாப்தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒருசயன்டிஸ்ட்தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்அவர்கள் கூலாக, ‘நீங்கள்லாப்_டாப்பைசரியாகபிளக்கில்செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுஎன்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டிகொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான்கார்டுகொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியைவைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!
பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்கஇன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மேலே சொன்னலாப்_டாப்விஷயம் போல்மைக்ரோவேவ் அவன்பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலானமைக்ரோ வேவ் அவன்கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்றுபதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனைரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்தகியாரண்ட்டி_வாரண்ட்டிவார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்இல்லாதவர்கள், ஒருசுவிட்ச் கன்வெர்டர்வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.
நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’
யார் நுகர்வோர்?
தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

            

Sunday 7 July 2013

CPARSORG.துவக்கவிழா-07-07-2013


     மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                                       CPARS.ORG - சங்கத்தின் வலைப்பூவிற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                                                
      துவக்கவிழாவிற்கு வருகை தந்துள்ள மரியாதைக்குரிய சத்தி வட்டாட்சியர் அவர்களையும், மற்றும்தாளவாடி துணை வட்டாட்சியர் அவர்களையும்,திரு.போரான்-மல்லன்குழி பஞ்சாயத்து முன்னாள் தலைவர்-தாளவாடி அவர்களையும் வரவேற்ற சங்கப்பிரதிநிதிகள்.

          இன்று 07-07-2013  ஞாயிறு (ஜூலை மாதம் ஏழாம் தேதி) மாலை மூன்று மணிக்கு ஈரோடு மாவட்டம் (சத்தியமங்கலம் -லாரி உரிமையாளர்கள் சங்கம் அருகில் உள்ள)  
                          புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு''.என்ற சமூக நல அமைப்பின் மாநில அமைப்பின் துவக்கவிழா நடைபெற்றது.
  
                           CPARS.ORG-சங்க துவக்கவிழாவின்போது- புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடல் போற்றினர்..
       சத்தியமங்கலம் வட்டாட்சியர் மரியாதைக்குரிய K.கண்ணப்பன்M.Sc.,B.Ed.,B.L.,அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  சங்கத்தின் முதல் விழாவினைத் துவக்கி வைத்தார்.அருகில் சங்கத்தின் தலைவர் A.A.ராமசாமி மற்றும் துணைத்தலைவர் S. ரவி அவர்கள்.
     

  
            தொடர்ச்சியாக, தாளவாடி துணை வட்டாட்சியர் மரியாதைக்குரிய S.ஆறுமுகம் அவர்களும்,புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகளும் மற்றும்  மரியாதைக்குரிய  ஜேம்ஸ் P. குணராஜ்M.A.,M.Ed., அவர்களும்  குத்துவிளக்கு ஏற்றினர். 

                        
                              
                சத்தியமங்கலம் வட்டாட்சியர் மரியாதைக்குரிய K.கண்ணப்பன்,M.Sc.,B.Ed.,B.L., அவர்களது தொடக்க உரையில் பின்வருமாறு பேசினார்.
                 பொதுமக்கள் - நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமை பற்றிய விழிப்புணர்வு இன்னும் நகர்ப்பகுதிகளில் கூட பெறவில்லை.அதேபோல சாலையில் பயணம் செய்யும் விதிமுறைகள் தெரியாத நிலையில்தான் விருப்பம்போல 
            போக்குவரத்து செய்கிறார்கள். எனவே நகர்ப்பகுதிகள் மக்களுக்கும்,பள்ளிக்கூடங்கள்,கிராமப்பகுதியினர்,மலைப்பகுதியினர் ஆகியோரும் நுகர்வோர் பாதுகாப்புகளையும்,சாலைப் பயணத்தில் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்புவிதிமுறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
       கலப்படம் என்பது யாருக்காவது தெரிய வந்தால் தகவல் கொடுக்கவேண்டும்.உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.

   தாளவாடி துணை வட்டாட்சியர் மரியாதைக்குரிய S.ஆறுமுகம் -ஐயா அவர்கள் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். 
     
வீர வணக்கம்;-
                    நமது பாதுகாப்பிற்காக இன்னுயிர் நீத்த தியாகிகள்,ராணுவ வீரர்கள்,மீட்புப்பணியினர்,காவல்துறையினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி - வீர வணக்கம்! என நினைவு போற்றும் மரியாதை செலுத்தப்பட்டது.
                 
 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி;- 
                  மரியாதைக்குரிய K. கண்ணப்பன்M.Sc.,B.Ed.,B.L., அவர்கள்    வட்டாட்சியர்  -சத்தியமங்கலம்.  மற்றும்   மரியாதைக்குரிய S.ஆறுமுகம்  அவர்கள் துணை வட்டாட்சியர்- தாளவாடி, ஆகியோர்  முன்னிலையில்  சங்கத்தின் உறுதிமொழி அனைவராலும் உரக்க வாசித்து ஏற்கப்பட்டது.
         உறுதிமொழி விவரம் கீழ்கண்டவாறு,   
                   உறுதிமொழி;- (PLEDGE)- 07-07-2013

        (1) நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், நமது  முன்னேற்றத்திற்காகவும்  -நாமும் ,நமது  வருங்கால  சந்ததியினரும்   நாட்டின் ஒற்றுமைக்கான பண்புகளுடனும்,சமாதானத்துடனும்,மகிழ்ச்சியு

டனும்,வளத்துடனும், வாழ்வதற்காகவும் ஒத்துழைப்பேன்.

     (2) அதற்காக ,சாதி,மத,இன,மொழி,அரசியல் வேறுபாடு இல்லாமல் இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டும், ஒன்றிணைந்து செயல்படுவேன்.

       (3) நாட்டின் நன்மைக்காக  தன்னையே அர்ப்பணித்து உயிர்நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளையும்,ராணுவத்தினரையும்,மீட்பு பணியினரையும்,காவலர்களையும் நினைவில் வைத்து போற்றி வணங்குவேன்.

       (4) நமது விழிப்புணர்வுக்காக நுகர்வோர் கல்வி பெற்றும்,சாலைப்பயணத்தில் பாதுகாப்பிற்காக சாலை பாதுகாப்பு கல்வி பெற்றும் அதனைக் கடைப்பிடித்து நானும் வாழ்வேன். மற்றவரையும் வாழவிடுவேன் என்று உளமாறவும்,உண்மையுடனும் உறுதி ஏற்கிறேன்.மேற்கண்டவாறு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டு அமர்ந்த பிறகு,

  
 
             சங்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய A.A.ராமசாமி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவரது உரையில் மக்களுக்காக எவ்வித சுயநலமும் இன்றி பொதுநோக்கினைக் கொண்டு செயல்படுவோம்.இந்த சங்கத்தை மாபெரும் மக்கள் சங்கமாக மாற்றுவோம்.அரசியல் கலப்பு இன்றி 'மக்களுக்கு மக்களே அரசன்' என்பதை வலியுறுத்துவோம் என்று கூறினார்.
     
    சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய A.P.ராஜூ தாளவாடி அவர்கள் துவக்கவிழாவிற்கு வருகைதந்துள்ள அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.விழா மேடையில் மரியாதைக்குரிய சத்தியமங்கலம் வட்டாட்சியர் அவர்கள்,தாளவாடி துணை வட்டாட்சியர் அவர்கள்,சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.லோகநாதன் அவர்கள்,சங்கத்தின் துணைத்தலைவர் திரு.ரவி அவர்கள்.



           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் திரு.த.வேணுகோபாலன் அவர்கள் மரியாதைக்குரிய வட்டாட்சியர்-(சத்தியமங்கலம்)அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி உபசரிக்க அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.


 
       சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்,சத்தியமங்கலம்-லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் நிர்வாகியுமான மரியாதைக்குரிய K.லோகநாதன் அவர்கள் வழிகாட்டுதல் உரை  நிகழ்த்தினார்.அவரது உரையில் நுகர்வோர் பாதுகாப்பு மட்டும் போதாது.இன்றைய சூழலில் சாலைப்பாதுகாப்பும் அவசியம் என்றார். சாலைக்கல்வி கொடுக்க, லோகு ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியானது அனைத்து கல்லூரிகள், பள்ளிகள்,கிராமங்கள்,மலைப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு
இலவச புத்தாக்கப்பயிற்சி,மன அழுத்தம் நீங்குவதற்கான பயிற்சி  கொடுக்கும்.இந்த சங்கத்தோடு இணைந்து அதற்கான செயல்பாடுகளில் மாதந்தோறும் செயல்படுத்தும் என்று கூறினார்.
       

              சங்கத்தின் செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் சங்கத்தின் பெயர் விளக்கம் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.நோக்கங்களில் முக்கியமானவைகளான  (1) CPARS.ORG  சங்கம் பதிவு அனுமதி பெற்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் 'மாணவர் தினவிழா' மற்றும் 'ஓட்டுனர் தினவிழா' அனுசரிப்பது.(2) துவக்கவிழா நடைபெறும் இன்றைய தேதியான ஜூலை மாதம் ஏழாம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் 'பாதசாரிகள் & பயணிகள் தினவிழா' மற்றும் 'நடத்துனர் தினவிழா' அனுசரிப்பது.(3)மக்கள் நலனுக்கான சேவையில் தனியாகவோ,அரசுத்துறைகளுடன் இணைந்தோ,பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ,தனிநபரான தன்னார்வலர்களுடன் இணைந்தோ செயல்படும். பொது மக்களுக்கு  'நுகர்வோர் கல்வி மற்றும் சாலைப் பாதுகாப்பு கல்வி' கொடுக்க 'Mobile Library' என்னும் 'நடமாடும் நூல்நிலையம்' அமைத்து  மக்கள் போக்குவரத்து மிகுந்துள்ள பேருந்து நிலையங்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,முக்கிய சந்திப்புகள்,கடைவீதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,திருவிழாக்கூட்டங்கள்,
பொதுவிழாக் கூட்டங்கள்,கிராமப்பகுதிகள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால வேளையில் தொடர்ந்து செயல்படுத்துவது ஆகும். என்று சங்கத்தின் குறிக்கோளை எடுத்துக் கூறினார்.
    

             முன்னிலை வகித்த புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி மரியாதைக்குரிய ஜேம்ஸ் P.குணராஜ்,M.A.,M.Ed.,அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது , பொதுமக்கள் சேவைக்காக செயல்பட புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. என்றும் தயாராக உள்ளதாகக் கூறினார்.
 
           நிறைவாக சங்கத்தின் பொருளாளர் திரு.V.பாலமுருகன்,B.B.A., அவர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும்  மற்றும் சங்கத்தின் அடையாளக்குறியீடு (LOGO) வடிவமைப்பு மற்றும் அழைப்பிதழ் வடிமைப்பு செய்து உதவிய நமது செயற்குழு உறுப்பினர் திரு.P.S.பெரியசாமி-ஸ்ரீபாலாஜு ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் -கோபி செட்டிபாளையம் அவர்களுக்கும் நன்றி கூறினார்.
    முடிவில்  புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவியர் நாட்டுப்பண் இசைக்க துவக்கவிழா இனிதே நிறைவு பெற்றது..

   சிறந்த ஓட்டுனர் தேர்வு;-
                      அனுசரிப்பு,பொறுமை ஆகிய குணங்களுக்கான பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் கனரக சரக்கு வாகன ஓட்டுனர் திரு.மூர்த்தி அவர்களுக்கு துணை வட்டாட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய காட்சி.


                       
சிறந்த ஓட்டுனர் தேர்வு;-                  
                      அனுசரிப்பு,பொறுமை ஆகிய குணங்களுக்கான   பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் கனரக சரக்கு வாகன ஓட்டுனர் திரு.சலீம் பாய் - அவர்களுக்கு மரியாதைக்குரிய  வட்டாட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய காட்சி.
  
                 இந்தக்கூட்டத்தின்போது சிறந்த ஓட்டுனர்களாகத் தேர்வு செய்யப்பட்ட தனியார்  கனரக சரக்கு வாகன ஓட்டுனர்களான திரு.சலீம் பாய், மற்றும் திரு.மூர்த்தி ஆகிய இரண்டு ஓட்டுனர்களையும்    மரியாதைக்குரிய  வட்டாட்சியர் -சத்தியமங்கலம்     அவர்களும்,மரியாதைக்குரிய துணை வட்டாட்சியர்-தாளவாடி  அவர்களும்  பாராட்டினர்.
              
                 சங்கத்தின் நோக்கங்கள் என பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அச்சிட்ட பிரதியின் விவரம் கீழ்கண்டவாறு,


         சிபர்ஸ்ஆர்க்- சங்கத்தின் நோக்கங்களில் சில,
                         மக்களின் பார்வைக்கு;-

         (1)  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்  சமூக நலனைக் காக்க- சாதி,மத,இன,மொழி,அரசியல் சார்பற்ற,இலாப நோக்கமற்ற,பொதுநலச்சேவை அமைப்பாக செயல்படுவது.நமது தேச ஒற்றுமைக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் பாடுபட நமது சங்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவது.

     (2)  மக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு கல்வி,சாலை பாதுகாப்பு கல்வி கொடுப்பது.இதற்காக பொதுக்கூட்டம்,பிரச்சாரம்,கருத்தரங்கம்,பயிலரங்கம்,.கலந்துரையாடல்,    விவாதமேடை,பயிற்சிப்பட்டறை,வழிகாட்டி மையம் அமைத்து செயல்படுத்துவது.

     (3) வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அனைவருக்கும் இலவச புத்தாக்கப்பயிற்சி மற்றும் மனநலப்பயிற்சி கொடுப்பது.மது,போதை,புகை,கலாச்சார சீர்கேடு,எயிட்ஸ்,காசநோய்,போன்ற தீமைகள் பற்றி விழிப்புணர்வு கொடுப்பது.

    (4)  நூலகம் அமைப்பது. வாசிப்புத்திறனை மேம்படுத்த நடமாடும் நூலகம் ஏற்படுத்தி  செயல்படுத்துவது.

     (5)  மலைவாழ் மக்கள்,கிராமப்பகுதி மக்கள்,இளைஞர்கள் நலனுக்காக பாடுபடுவது.

     (6)  கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது.கல்வி சம்பந்தமான கண்காட்சி, போட்டித்தேர்வுகள்,சிவில் சர்வீஸ் தேர்வுகள்,நுழைவுத்தேர்வுகள்,பொது அறிவுத்தேர்வுகள்,அதற்கான ஆலோசனை வழங்குவது.பயிற்சிகள் கொடுப்பது.வழிகாட்டி மையம் அமைப்பது.வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது.

    (7) பலவகை விபத்துக்கள்,முதலுதவி பயிற்சிகள்,மன நலம்,உடல் நலம்,சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது.

    (8)  பலவகை விபத்துக்கள்,இயற்கைச்சீற்றத்தினால் ஏற்படும் பேராபத்துகளின் போது தனியாகவோ,அரசுத்துறைகளுடன் மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ  உதவுவது.மக்கள் நலனுக்காக காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறையுடன் இணைந்து செயல்படுவது.

    (9) மேற்கண்ட மக்கள் நலனுக்காக புத்தகங்கள்,அச்சுப்பிரதிகள்,சுற்றறிக்கைகள்,விளம்பங்கள் வாயிலாக பரப்புரை செய்வது.     
           துவக்கவிழாவிற்கு வருகை தந்து இருந்த பொதுமக்கள் அனைவருக்கும்
         சங்கத்தின்   உறுதிமொழியும் & நோக்கங்களின் முக்கிய பகுதிகளும் அச்சிட்ட பிரதியாக வழங்கப்பட்டன.

        அதன் பிறகு சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும்,தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றன.அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
                                                                                                                      என,
                                   சங்கத்தின் தலைவர் அவர்களது ஒப்புதலுடன்,
                                                                                                       C.பரமேஸ்வரன்,
                                                                                                                  செயலாளர்,
                                                                                                    சிபர்ஸ்ஆர்க் (CPARS.Org),
                                                                                                    மாநில மையம்,
                                                                                                    தமிழ்நாடு.