Sunday 19 April 2015

மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நம் முன்னோர்கள் மிக எளிதில் கிடைக்கும் தாவரங்களின் மருத்துவப் பயன் அறிந்து வைத்தியம் செய்து கொடிய நோய்களையும் குணமாக்கினார்கள்.ஆனால் நமது அறியாமையினாலும்,ஆர்வமின்மையாலும்,அத்தகைய மருத்துவத்தாவரங்களை நாம் களைகளாகவும்,வீணான புதர்களாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.தாவரங்களின் மருத்துவ சிகிச்சைகளால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.எளிமையாக கூற வேண்டுமானால் உணவே மருந்து எனலாம்.அத்தகைய தாவரங்களை கண்டறிந்து சேகரித்து தொகுத்து வளர்த்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஆகிய நமது அமைப்பானது மருத்துவத்தாவரங்களையும் பாதுகாக்க உறுதி ஏற்றுள்ளது.அதாவது தாளவாடி மலை,கடம்பூர் மலை,பர்கூர் மலை,உதகை மற்றும் கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகள் உட்பட அனைத்து சித்த மருத்துவர்களையும்,அரசு சித்த மருத்துவர்களையும்,நாட்டு வைத்தியர்களையும்,நாட்டு மருந்துக்கடைகளையும்,கல்வித்துறையையும்,வனத்துறையையும்,
வேளாண்மைத்துறையையும்,பழங்குடிஇனத்தவர்களையும்,நர்சரி அமைத்துள்ளவர்களையும்,தோட்டக்கலைத்துறையையும்,
விவசாயிகளையும்,தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து  மருத்துவத்தாவரங்களுக்கான மாபெரும் இயக்கமாக செயல்படுத்திட முடிவு எடுத்து........
           அதன் துவக்கமாக தாளவாடியில் உள்ள ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கிளையில் 2015ஏப்ரல்19 ஆம் தேதி இன்று திரு. T.ஆறுமுகம் கிளை மேலாளர் அவர்களால் கற்பூரவள்ளி செடி நட்டு மூலிகைப்பண்ணை துவக்கி வைத்தார்.திரு.C.பரமேஸ்வரன் செயலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்த பண்ணை 
    சத்தியமங்கலத்திலுள்ள  SRN மெட்ரிக்குலேசன் பள்ளி யில் 10சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு அதில் மருத்துத்தாவரங்கள் பண்ணை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்பு கொள்ள .........
    கைப்பேசி எண்    +919585600733 மற்றும்
    மின்னஞ்சல் முகவரி consumerandroad@gmail.com