Wednesday 21 January 2015

மரிய தீப்தி மெட்ரிக் பள்ளி - பனகஹள்ளி -தாளவாடி ஒன்றியம்.

        

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (சிறப்பு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

     MARIA DEEPTHI MATRICULATION SCHOOL - PANAHALLY - THALAVADI - 638461

    ''சாலை பாதுகாப்பு -வெறும் வாசகம் அல்ல- அது வாழ்க்கை முறை...''
               என்ற தலைப்பின்கீழ் 26-வது சாலை பாதுகாப்பு வாரவிழா-
  ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம் வட்டம்-தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனகஹள்ளி- மரிய தீப்தி பதின்மப் பள்ளியில்  21-01-2015 புதன்கிழமை இன்று காலை 9.00மணி முதல் 10.00மணி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி  நடைபெற்றது.
தலைமை;
சகோதரி.மெர்சிஆப்ரஹாம் அவர்கள்,பள்ளி தாளாளர் 
            Sr.Mercy Abraham , correspondent  
 MARIA DEEPTHI MATRICULATION SCHOOL - PANAHALLY - THALAVADI - 638461
முன்னிலை;
சகோதரி.ஜான்சிஜோசப் அவர்கள், பள்ளி முதல்வர்
  Sr.Jancy Joseph ,Principal
MARIA DEEPTHI MATRICULATION SCHOOL - PANAHALLY - THALAVADI - 638461
 

MARIYA DEEPTHI MATRICULATION SCHOOL மாணவர் குழு, அனைவரையும் வரவேற்றனர்.



        MARIA DEEPTHI MATRICULATION SCHOOL - PANAHALLY -
  பள்ளி மாணவ,மாணவியர் இறை வணக்கத்துடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விழா துவக்கப்பட்டது.



            திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்
   (JAPAN SHITO - RYU KARATE MASTER - THALAVADI) துவக்கவுரை ஆற்றினார்.
                                       திரு.T.ஆறுமுகம் அவர்கள்,
            (கிளை மேலாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-
                    ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளை) 
 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ,மாணவியர் சாலையில் பாதுகாப்பாக பயணிப்பது பற்றி உரை ஆற்றினார்.


                         திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
        (செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
                              சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு)
 சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு என்ற தலைப்பின்கீழ் விழிப்புரை ஆற்றினார்.
அதாவது ,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம் கொடுத்து வரும் புத்தாக்க பயிற்சிகள், 
சத்தியமங்கலம்-லோகு டிரைவிங் ஸ்கூல் கொடுத்த புதுப்பித்தல் கல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்த நீயூட்டனின் இயக்க விதிகள் உட்பட அறிவியல் விதிகள் ,
முப்பது ஆண்டு கால ஓட்டுனர் பணி அனுபவம் 
ஆகியவற்றின் அடிப்படையில் 
 (1)பாதுகாப்பான சாலை பயணம்,(பாதசாரிகளாக,பயணிகளாக,ஓட்டுனர்களாக,சொந்த வாகன ஓட்டிகளாக)...... 
(2)சாலையின் வகைகளும்,பாகங்களும்,தன்மையும்,
(3)வாகனங்களின் இயக்க விதிகளும்,வேகமும்,நேரமும்,செல்லும் தூரமும்,
(4)போக்குவரத்துச்சின்னங்கள்,
(5)சாலைக்குறியீடுகளும்,சைகைகளும்,
(6)சாலை விதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,
(7)உடல் நலமும்,மன நலமும் வாழ்நாளின் அழியாத சொத்துக்கள்,அவசர உதவிக்கான தொடர்பு எண்கள்,(7)முதலுதவியும்,காப்பீடுகளும் பற்றி விளக்கினார்.அப்போது புகைத்தலின் தீங்கு பற்றி  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் செயல்முறை விளக்கம் காட்டினார்.





   அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க...... விழா இனிதே நிறைவடைந்தது.