Wednesday 28 May 2014

தாளவாடியில் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவின் இலவச கண் சிகிச்சைக்கான பிரச்சாரம்-01

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        31ஆம் தேதி மே மாதம் 2014 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, தாளவாடி அசிஸி மருத்துவமனையில் கண் நோய்க்கான இலவச பரிசோதனை & சிகிச்சை முகாம்.........

         இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு ஒலிபெருக்கி பிரச்சார வாகனம்.நீண்ட காலமாக சிறப்பாக இலவசமாக சமூகப்பணி ஆற்றிவரும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண்நோய் நிவாரணக்குழுவினருக்கு சமூகம் சார்பாக நன்றி கூறி வணங்குகிறோம்.


  தாளவாடி கோடிபுரம் சிறு கடை உரிமையாளர்  திரு.வீரண்ணா அவர்கள் நோட்டீஸ்களை கடை முன்பு ஒட்டிவைத்து மக்களுக்கு சமூகப்பணி ஆற்றியகாட்சி. (அவரையும் வாழ்த்துவோம்.) 
            2014 மே மாதம் 31ஆம் தேதி தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க இருப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க    28-05-2014 புதன்கிழமை இன்று  தாளவாடியில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் நடைபெற்றது.அப்போது தமிழிலும் கன்னடத்திலும் அச்சடிக்கப்பட்ட பிரச்சார நோட்டீஸ்களும் ஆறாயிரம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தமிழிலும் கன்னடத்திலும் பேனர் அச்சடித்து தாளவாடி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.பிரச்சாரத்தில்

 கண் சிகிச்சை முகாம் அமைப்பாளர் திரு.நடராஜன் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,வாகன ஓட்டுநர் திரு.லட்சுமணன் அவர்களும் பிரச்சாரம் செய்தனர்.இருநூறு கிலோமீட்டர் தூரம் பிரச்சாரம் ஒரே நாளில் ஓய்வின்றி அனைத்து ஊர் உட்புறவீதிகளிலும் வாகனத்தை ஓட்டிச்சென்று மக்களை நேரில் சந்தித்து விளக்கமாகக்கூறி நோட்டீஸ்களும் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.வழிநெடுகிலும் தோட்டங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்தவர்கள்,நூறுநாட்கள் வேலைத்திட்டத்தின்படி வேலை செய்துகொண்டிருந்தவர்கள்,பேருந்துகளில் பயணித்தவர்கள் என அனைவருக்கும் இலவச கண் சிகிச்சைக்கு வருகை தந்து கண் சம்பந்தப்பட்ட அனைத்து தொந்தரவுகளையும் பரிசோதித்து இலவசமாக பயனடையுமாறு அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி  பிரச்சாரம் செய்யப்பட்டது.
             வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் 28 - 5-2014 புதன்கிழமை  இன்று காலை 7-மணிக்கு தாளவாடியில் தொடங்கி ராமாபுரம், எல்லக்கட்டை, பாரதிபுரம், சேசன் நகர், தாளவாடி ஒசூர், ஜீவா போக்குவரத்து நகர், தொட்டகாஜனூர், தர்மாபுரம், சூசைபுரம், பீம்ராஜநாகர், சொத்தன்புரம், குருபுருண்டி,
 ஒங்கன்புரம், அருள்வாடி, மெட்டல்வாடி, மெட்டல்வாடி  ஒசூர், கரளவாடி, பாறையூர், மரியாபுரம், மல்லன்குழி, பட்டுப்பண்ணை, தமிழ்புரம், ஜோரே ஒசூர், மாதஹள்ளி, சிமிட்டஹள்ளி, பையனாபுரம், காமையன்புரம், பாளையம்,
 ஆனந்தபுரம், பனகஹள்ளி, சிங்கன்புரம், கொங்கள்ளி, பொதை,  மல்லையன்புரம்,
 பெலத்தூர், கெட்டவாடி, கிரிஜம்மாதோப்பு, குன்னன்புரம், ஜீரகஹள்ளி, தொட்டமுதுகரை,
 பசப்பன்தொட்டி, கல்மண்டிபுரம், சோளகர்தொட்டி,  எரகனஹள்ளி, கிருஷ்ணாபுரம்,
 திகினாரை, மல்குத்திபுரம், தொட்டி, இரிபுரம், அண்ணாநகர்,  தாளவாடி, மரூர், மகாராஜபுரம், சிக்கள்ளி,
 இக்கலூர், நெய்த்தாளபுரம், முதியனூர், மைராடா காந்திநகர், சீவகனஹள்ளி,
 தொட்டபுரம் அசிஸி மருத்துவமனை, தொட்டபுரம், தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, மாவநத்தம், காளிதிம்பம், ஆசனூர்
, திம்பம் 
         வரை பிரச்சாரம் செய்யப்பட்டது.

  தாளவாடி வட்டார அனைத்து கிறித்துவ சர்ச்களுக்கும் நோட்டீஸ்கள் வழங்கி அதன்படி அனைத்து சர்ச் களை சேர்ந்த திருமிகு.கிறிஸ்துவ பாதிரியார்கள் கடந்த 25 - 5 - 2014  ஞாயிற்றுகிழமை அன்றே தாளவாடி,திகினாரை,பனகஹள்ளி,தொட்டபுரம்,முதியனூர்,கெட்டவாடி,
சிமிட்டஹள்ளி,கும்டாபுரம்,சிக்கள்ளி, ஊர்களில் அமைந்து உள்ள சர்ச்களுக்கு வருகைபுரிந்த அனைத்து மக்களுக்கும் பிரச்சாரம் செய்யப்பட்டது. நெய்த்தாளபுரத்தில் அன்றைய தினம் நடந்த நாடக அரங்கத்திலும் கண் சிகிச்சை பற்றி அறிவித்து மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆசனூர் அரேபாளையம் மற்றும் அப்பகுதி வட்டார  மலைவாழ் மக்களுக்காக அரே பாளையம் பேருந்து நிலையத்தில்  பெட்டிக்கடை மற்றும் டீக்கடை வைத்து உள்ள திரு .மூர்த்தி அவர்களிடம் நூறு நோட்டீஸ்கள் வழங்கி அந்த வட்டார  மலைப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதேபோன்று  மாவள்ளம், தேவர் நத்தம்,குளியாடா மலைவாழ் மக்களுக்காக  கோட்டாடையில் மளிகை கடை வைத்துள்ள திரு.முத்தப்பா அவர்களிடமும்,திரு.பழனிச்சாமி அவர்களிடமும்  நூறு நோட்டீஸ்கள் வழங்கி அந்த வட்டார மலைப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.தாளவாடி வட்டார வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளிலும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.தாளவாடி பேப்பர் ஏஜண்ட் மற்றும் பத்திரிக்கை நிருபர் திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்களும் அனைத்து பேப்பர்களிலும் பிரச்சார நோட்டீஸ்களை வைத்து அனுப்பியும்,எங்களுக்கு சாப்பாடு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து உதவினார்.
 (சமூகப்பணி ஆற்றிவரும் மேற்கண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.)

 அனைவரின் கவனத்திற்கு ;
                 
      (1) கன்னட நோட்டீஸ்கள்- 
                        கர்நாடகா மாநிலம், சாம்ராஜ நகரம் மாவட்டம், C.H.நகரத்தின் மையத்தில் உள்ள அதாவது  டபுள் ரோட்டில் எஸ்.பி.அலுவலகம் முன்பு அதாவது பஸ்வேஸ்வரா தியேட்டர் அருகிலுள்ள தேகுல ஆப்செட் முத்ரண  (Degula Offset Mudrana,Double Road,Chamrajanagar (Karnataka)
அச்சகத்திலும்,

(2)கன்னட பேனர் -
                Degula Offset Mudrana அச்சகத்திற்கு அருகிலுள்ள- பவன்குமார் டிஜிட்டல் பிரிண்டர்ஸ் ஃபிளெக்ஸ் பிரிண்டர்ஸ் (Pavankumar Digital Printers & Flex Printers ,Opp S.P.Office,Double Road,C.H.Nagar) அலுவலகத்திலும் 

(3)தமிழ் நோட்டீஸ்கள்-
          குன்னூர் மேட்டுப்பாளையத்திலுள்ள பாரத் ஆப்செட் பிரிண்டர்ஸ் அச்சகத்திலும்,
(4)தமிழ் விளம்பர பேனர்-
           குன்னூர் மேட்டுப்பாளையத்திலும் அச்சடிக்கப்பட்டது