Monday 14 October 2013

குடிபோதையா?..

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
             நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      TASMAC-Tamilnadu State Marketing Corporation 
                                  பற்றி எதற்காக கவலைப்படணும்?
         இதை படியுங்க முதலில்....
              அரசு மதுபானக்கடையில் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு புத்தகம் போன்று ஒரு அடையாள அட்டை கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும்.
        தினசரி அல்லது ஒரு மாதத்தில் எவ்வளவு குடிக்கிறார்கள் என்று அந்த அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.
           குடித்த அளவு விவரத்தையும்,எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்? என்ற நேரத்தையும்,எத்தனை ரூபாய்க்கு குடித்திருக்கிறார்கள்?,குடித்த பிறகு மருத்துவத்திற்கு எத்தனை செலவு செய்துள்ளார்கள்?என்ற விவரத்தையும் ஊரறிய தெரிவிக்க வேண்டும்.அல்லது அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.
         எந்தப்பகுதியில் குடித்தாலும் அடையாள அட்டையில் பதிய வைக்க வேண்டும்.அதாவது பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
        இருபத்தொரு வயதுக்குள் குடிப்பவர்களை அடையாளம் காண வேண்டும்.அதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி இளவயதுடையவர்களை  கண்டறிந்து தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.மாணவப்பருவத்தில் குடிக்க பழக்கியவர்களை அறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
       அரசு மருத்துவ மனைகளில் குடிபோதைக்கு அடிமையானவர்களை திருத்த ஆலோசனை மையம் அமைத்து அனைவருக்கும் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.குடிபோதையின் தீமைகளை விளம்பரப்படுத்த வேண்டும்.இதனை போர்க்கால நடவடிக்கையாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.இல்லையேல் வருங்கால இந்தியா?  கேள்விக்குறியாகிவிடும்.என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. என்பதை அரசாங்கம் மட்டுமின்றி அனைவரும் உணர வேண்டும்.