Thursday 29 January 2015

சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல.அது வாழ்க்கைமுறை

                 SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (இரண்டு)


 
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
 29.01.2015வியாழக்கிழமை  இன்றுமாலை 3.00மணிக்கு நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம் -சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு கல்வி நடைபெற்றது.
             திருமதி.R.தங்கமணி அவர்கள், தலைமை ஆசிரியை,(நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம்,சத்தியமங்கலம்).சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவிற்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.






                 திரு.R.மனோகரன் அவர்கள்,உதவி தலைமை ஆசிரியர்,(நகராட்சி உயர்நிலைப் பள்ளி,ரங்க சமுத்திரம்,சத்தியமங்கலம்) அனைவரையும் வரவேற்று துவக்கவுரை நிகழ்த்தினார்.




          திரு.A.A.இராமசாமி அவர்கள்,தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் ..(இடதுபுறம்)



          அரிமா.K.லோகநாதன் அவர்கள்,(லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)முன்னிலை வகித்து விழிப்புரை நிகழ்த்தினார்.
          அப்போது ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் எடுத்து வாகனம் ஓட்ட வேண்டும்.சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.சாலையில் பாதசாரிகளாக நடக்கும்போது வலதுபுறமாகத்தான் நடக்க வேண்டும்.அப்பதுதான் எதிரில் வரும் வாகனங்களைக் கவனமாக பார்த்து நடக்க முடியும்..போக்குவரத்து விதிகளை மற்றும் உத்தரவுச்சின்னங்களை,எச்சரிக்கைச்சின்னங்களை,தகவல் சின்னங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.வாகனங்கள் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் சாலைகள் பற்றிய அடிப்படை அறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும்.வாகனங்களை புகை பரிசோதனை செய்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்.முதலுதவி பயிற்சி எடுக்க வேண்டும்.காப்பீடுகள் அவசியம் தேவை என்றார்....




          திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் சிறப்புரையில்,சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு,ஆதலால் நமது பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.சாலை விதிகளை மதிக்க வேண்டும்.சாலைக்குறியீடுகளை அறிந்துகொள்ள வேண்டும்.போக்குவரத்துசின்னங்களை தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும்.பாதசாரிகளாக,பயணிகளாக,அனைத்து வகை வாகனங்களை ஓட்டுபவர்களாக சாலையில் பாதுகாப்பாக போக்குவரத்து செய்ய வேண்டும்.உடலை காக்க வேண்டும்.அதனால் மனதும் காக்கப்படும்.மனது என்பதன் மறுவடிமாகிய கவனம் சிதறாமல் நமக்கு பாதுகாப்பு கொடுக்கும்.என்றார்.

    (1) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 
   (2) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 
(3) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 



       (4) புகைத்தலின் தீங்குகள் பற்றி  திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 

         திரு.R.மனோகரன் அவர்கள் அனைவருக்கும்  நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.
                   (ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் உட்கோட்டம் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் திரு.மா.திருநாவுக்கரசு ஐயா,அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தபோது எதிர்பாராத பணிச்சூழல் காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை..)