Friday 19 December 2014

கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி -கோபிசெட்டிபாளையம்-குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கவிழா-2014

           கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-                               
                                             கோபிசெட்டிபாளையம் - 638452

மரியாதைக்குரியவர்களே,
                                            வணக்கம். 
      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   கடந்த2014 நவம்பர் 28 ஆம் தேதி காலை 11.30மணிக்கு கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழாமற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது.
   நுகர்வோர் மன்றம் துவக்கவிழா - பற்றிய நாளிதழ் செய்தி  தங்களது பார்வைக்காக......
                         ( தினபூமி நாளிதழுக்கு சமூகம் சார்பாக நன்றி..)

             குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு பற்றிய புகைப்படங்களின் தொகுப்பு தங்களின் பார்வைக்காக....






















 சமூக நலனில் அக்கறையுள்ள அன்பன்
          

Thursday 4 December 2014

ஒளியும் & ஒலியும் - பற்றிய விவரங்கள்.



 மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
 (1)ஒலி.........
              ஒலியின் பண்புகள் அதிர்வெண்,வீச்சு,திசைவேகம்,நீளம் ஆகியன ஆகும்.
ஒலி பரவ மூலக்கூறுகள் அவசியமாகும்.வெற்றிடத்தில் பயணிக்காது.திட,திரவ,வாயு நிலைகளில் பயணிக்கும். ஒலி வேகம் ஒரு மாறிலி ஆகும். வெப்பமானது காற்றில் செல்லும் ஒலியின் வேகத்தை மாற்றும்.ஒலியானது 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கடல்மட்டத்தில் காற்றில் ஒரு விநாடிக்கு 1230அடி தூரம்  பயணிக்கும்.அதே 20 டிகிரி வெப்பமுள்ள நன்னீரில் ஒரு விநாடிக்கு 4940 அடி தூரம்  பயணிக்கும்.இரும்பு எஃகு பொருளில் ஒரு விநாடிக்கு 19866.7அடி தூரம் பயணிகும்.அதாவது ஒலி செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகள் அடர்த்தி அதிகரிக்கும் அளவுக்கு ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.ஒலிமூலத்தை விட்டு விலக,விலக ஒலியின் அடர்த்தி குறையும்.ஒலிமூலத்தை நோக்கி அருகில் வர,வர ஒலியின் அடர்த்தி அதிகமாகும்.
    

(2)  ஒளி............
          ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட  மின்காந்த அலைகளாகும்.அதாவது அகச்சிவப்புக்கதிர்களுக்கும் புற ஊதாக்கதிர்களுக்கும் இடைப்பட்ட அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளாகும்.

               நாம் கண்ணால் காணும் ஒளியானது 
           380 நானோமீட்டர் முதல் 740 நானோமீட்டர் வரை அலைநீளத்தைக்கொண்டது.ஒளி துகள் மற்றும் அலை என்ற இரு பண்புகளைக்கொண்டது.அதனால் பல்வேறுபட்ட வண்ணங்களாக காண்கிறோம்.
ஒளி வேகம் ஒரு மாறிலி ஆகும். ஒளியானது நேர்கோட்டில்தான் பயணிக்கும்.வெற்றிடத்திலும் பயணிக்கும்.ஒளி ஊடுருவும் பொருட்களிலும் பயணிக்கும்.காற்றிலும் பயணிக்கும்.
                   ஒளிவேகத்தை C (Celerita) என்ற எழுத்தால் குறிப்பிடுகிறோம்.C - CELERITA என்ற இலத்தீன் சொல்லுக்கு தமிழில் வேகம் என்று பொருள் ஆகும்.ஒளி வெற்றிடத்தில் ஒரு விநாடிக்கு கடக்கும்தொலைவு 29,97,92,458 மீட்டர் (99,93,08,193அடி) தூரம்ஆகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - E=MC2 கணித இயற்பியல் சமன்பாடு..


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 

                      இந்தப் பதிவில் 

              ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களால் 1905ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருண்மை மற்றும் ஆற்றல் சமன்பாடு பற்றிய விபரமும் தெரிந்துகொள்வோம். 
   எந்தப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்குநிலையிலோ இருக்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக்கொண்டுதான் இருக்கும்.

              ஆற்றலை ஜூல் JOULE என்னும் அனைத்துலக அலகுகள் முறை அளவில் அளக்கப்படுகின்றன. நிறையை  MASS (எடையை) கிலோகிராம் அளவில் அளக்கப்படுகின்றன. ஒளி வேகத்தை  CELERITAS என்னும் C அளவு கொண்டு அளவிடப்படுகின்றன. கிளெரிட்டாஸ் CELERITAS என்பது வேகம் SPEED என்ற பொருள் கொண்ட  இலத்தீன் சொல் ஆகும்.
     இயல்பாக வெற்றிடத்தில் ஒளியின் வேகம் SPEED OF LIGHT  விநாடிக்கு இரண்டு இலட்சத்து தொண்ணூற்றுஒன்பதாயிரத்துஎழுநூற்றிதொண்ணூற்றிரண்டு கிலோமீட்டர் ஆகும்.அதாவது இருபத்தொன்பதுகோடியே தொண்ணூற்று  ஏழு இலட்சத்து தொண்ணூற்றிரண்டாயிரத்து நானூற்றைம்பது மீட்டர்கள் ஆகும்.

     அனைவருமே நியூட்டனின் ஈர்ப்புவிதியுடன்,நியூட்டனின் குளிர்வுவிதி,ஆர்க்கிமிடிஸ் மிதத்தல்விதி, பரப்பு இழுவிசை பற்றிய பாஸ்கல் விதி,பாகியல் விசை,பாயில்விதி,சார்லஸ்விதி, வெப்பவிளைவு பற்றிய ஜூல்விதி,கெப்ளரின் மூன்று விதிகள்,இராமன்விதி, ஓம்விதி,பெர்னௌலி விதி,ஆம்பியர் விதி, பிளம்மிங்கின் இடக்கை விதி,மின்காந்த தூண்டலின் விதிகள்,பாரடேயின் இரண்டு விதிகள்,ஆகிய அறிவியலின் அடிப்படை விதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.......
 

நியூட்டன் விதிகள் மூன்றும் மோட்டார் வாகனஇயக்கம் தொடர்பானவையே.



மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


    ஒரு பொருள் அல்லது வாகனம் திடீரென வேகமான இயக்கத்தைப்பெறவோ அல்லது திடீரென நிற்கவோ இயலாது.இயற்கைவிதிப்படி குறிப்பிட்ட கால அளவு எடுத்துக்கொண்டு படிப்படியாகத்தான் மாறுபாடு ஆகும்.அதாவது நிற்கவோ,இயங்கவோ நிகழும்.நியூட்டன் ஈர்ப்புவிதிப்படிதான் கோள்கள்,விண்மீன் திரள்கள்,மோட்டார் வாகனங்கள்,எறியப்படும் பொருட்கள்,விழும் பொருட்கள்,நீங்கள்,நான் என அனைத்து அசைவுகளுமே நிகழ்கின்றன.அவைகளின் வேகத்தைப் பொறுத்து மற்றும்  பலத்தை பொறுத்து அசைவு என்னும் இயக்கத்தில் மாற்றம் அடையும்.

வாகன இயக்கம் தொடர்பான நியூட்டனின் மூன்று விதிகள்;
(1) முதல் இயக்க விதி;
         முடத்துவம் INTERIA 
                  அதாவது பொருளின் நிலையான இயக்கத்திற்கும் விசைக்கும் உள்ள தொடர்பு,
 ஒரு பொருள் புறவிசை எதுவும் தள்ளாதபோது நிற்கும் அல்லது நேர்கோட்டில் சீரான வேகத்தில் செல்லும்.அதாவது விசை FORCE கொடுத்தால் இயங்கும்.விசை FORCE கொடுத்து தடுத்தால் நிற்கும்.
(2)இரண்டாவது இயக்க விதி; 
         வளர்வேகக் கோட்பாடு (PRINCIPAL OF ACCELERATION) 
        விசையின் அளவு மற்றும் திசையைப்பற்றிய வரையறை (இயல்பு) ஒருபொருளின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும்,தள்ளும் விசைக்கு மற்றும் செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.அதாவது விசை கொடுக்கும்வரை பொருளின் இயக்க வேகம் அதிகமாகும்.விசையை குறைக்கும்வரை பொருளின் இயக்க வேகம் குறையும்.ஒரு பொருளின் நிறைக்கு ஏற்றவாறு விசையானது வேக வளர்ச்சியை நேர்விகிதத்தில் அந்தப்பொருளில் உண்டாக்கும்.
              உதாரணமாக, 
              நின்றுகொண்டிருக்கும் மோட்டார் வாகனம்  மீது ஓடுகின்ற ஒரு வாகனம் மோதினால் நிற்கும் வாகனம் மோதிய வாகனத்தின் வேகத்திற்கேற்ப வேக மாற்றத்துடன் இயங்கும்.அதுவும் மோதிய திசையில்  நகரும்.அதே சமயம் நிற்கும் வாகனத்தின் நிறையும் (எடையும்) முக்கியமானது.நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் நிறை (எடை) அதிகமாக இருக்கும் அளவு மோதிய வாகனத்தின் நிறையும் (எடையும்) வேகமும் அதிகமாக இருந்தால் மட்டுமே நின்றுகொண்டிருக்கும் வாகனத்தில் பாதிப்பு ஏற்படும்.இதைத்தான் 
  'ஒரு பொருளின்மீது செயல்படும் விசைகள் சமன்செய்யப்படாதபோது' என்று கூறுகிறோம்.அதாவது பொருள்களின் வேக மாற்றமானது நிகரவிசையில் ஏற்படும்..
உதாரணமாக, 
            நின்றுகொண்டிருக்கும் கார் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி மோதினால் காரின் வேக மாற்றம் எதுவும் நிகழாது.காரணம் வண்ணத்துப்பூச்சியின் விசை அனைத்தும் காரின் அதிகப்படியான நிறையால் சமன் செய்யப்பட்டுவிடும்.
          இதுவே F = MA சமன்பாடு உருவாக உதவியது.

(3)மூன்றாவது இயக்க விதி' 
 விசையின் தன்மைக்கேற்ப எதிர்விசை உண்டு.
          அதாவது ஒவ்வொரு நேர் உந்துதலுக்கும் எதிராக அதற்கு சமமான எதிர் உந்துதல் இருக்கும்.
      (இந்தவிசையில் கவனிக்கவேண்டியவை;  ஒரே பொருளின் மீது செயல்விசையும் எதிர்ச்செயல் விசையும் செலுத்தப்படுவது இல்லை.அவை செயல் மற்றும் எதிர்ச்செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படும்.இவ்விரு விசைகளும் கால அவகாசமின்றி ஒரே நேரத்தில் செயல்படும்.)

 மூன்றாவது விதிக்கு நியூட்டன் ஆறு துணை விதிகள் எழுதியுள்ளார். நமது புரிதலுக்காக கீழே உள்ள உதாரணங்களைத்  தெரிந்துகொள்ளுங்க,
(ஒன்று) - 
                   உள்ளங்கையை சுவர்மீது வைத்து அழுத்தினால் அதாவது செயல்படுத்தினால் உள்ளங்கை வடிவம் சிறிது மாறும்.காரணம் சுவர் நம் கைமீது சமவிசையை அதாவது எதிர்ச்செயலை செயல்படுத்தும்.
(இரண்டு)-
        நீந்துபவர் குறிப்பிட்ட விசையுடன்(செயல்) தண்ணீரை பின்னோக்கி தள்ளும்போது அதற்கு சமமான எதிர்விசையை (எதிர்ச்செயல்)தண்ணீர் நீந்துபவர் மீது செலுத்தி முன்னோக்கித்தள்ளும்.
(மூன்று)-  
           ஒருவர் படகிலிருந்து கரைக்கு தாவும்போது படகின் மீது விசையை(செயல்) செயல்படுத்துவதால் படகு இயக்கம் பெற்று பின்னோக்கித் தள்ளப்படுகிறது.இதனால் படகு அவர்மீது எதிர்விசை செயல்படுத்தி(எதிர்ச்செயல்) கரையை நோக்கி தாவுவதற்கு (அவரது எதிர்ச்செயல் இயக்கத்திற்கு) காரணமாகிறது.
(நான்கு)
                    எதிர்ச்செயல் விசை இல்லையென்றால் நம்மால் நடக்கக்கூட முடியாது.நடக்கும்போது நாம் நமது கால்பாதத்தை தரையில் அழுத்தி தரைமீது  செயல் என்னும் விசையை செலுத்துகிறோம்.இதற்கு சமமான எதிர்ச்செயல் என்னும் எதிர்விசையை தரையானது நமது கால்பாதத்தின்மீது செயல்படுத்துகிறது.இந்த எதிர்விசை புவிப்பரப்பிற்கு சாய்வாக உள்ளது.அப்போது எதிர்விசையின் செங்குத்துக்கூறு நமது உடல் எடையை சமப்படுத்துகிறது.கிடைத்தளக் கூறு நம்மை முன்னோக்கி நடக்க உதவுகிறது.
(ஐந்து)
              துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேற்ற செயல் என்னும்  குறிப்பிட்ட விசையை செலுத்துகிறோம்.அப்போது அந்தவிசைக்கு சமமான எதிர்ச்செயல் என்னும் எதிர்விசை துப்பாக்கி மீது செயல்பட்டு நமது தோள்பட்டையில் பின்னோக்கித்தள்ளும்.
(ஆறு)
             பறக்கும்போது பறவையின் இறக்கைகள் காற்றை கீழ்நோக்கித் தள்ளும் (செயல்).அப்போது வளிமண்டலத்தில் பரவியுள்ள காற்றானது பறவையை மேல்நோக்கித் தள்ளுவதால்  ( எதிர்ச்செயல்) பறந்து செல்ல உதவுகிறது.இந்தப்பதிவில் குறைகளோ அல்லது பிழைகளோ இருந்தால் தயவுசெய்து கீழ்கண்ட எனது தொடர்பு எண்ணுக்கு தகவல் கொடுத்து உதவ வேண்டுகிறேன். என அன்பன்- பரமேஸ் டிரைவர்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள பொருண்மை மற்றும் ஆற்றல் சமன்பாடு பற்றியும் அறிந்துகொள்வோம்.

Monday 1 December 2014

பஞ்சாயத்துராஜ் அமைப்பு

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பஞ்சாயத்துராஜ் பற்றி தங்களது விழிப்புணர்வுக்காக...
 
பஞ்சாயத்துராஜ் அமைப்பு
                   இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நிலைதான் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் வாழ்வதற்கான குறைந்தபட்ச தேவைகள்கூட கிடைக்கப்பெறாத நிலையை தொடர்கின்றனர். (உழைப்பிற்கேற்ற கூலி, குறைந்தபட்ச அடிப்படை அவசியத் தேவைகளான உணவு, குடிநீர், கல்வி, சுகாதாரம் போன்றவை)
கடந்த அரை நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள நவீன மயம், சமூக பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சி ஆகியவை வறுமையை போக்குவதற்கு பதில் வறுமையின் நிலையை அதிகரிக்கச் செய்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதலால் கடைபிடிக்கப்படும் பொருளாதார கொள்கைகள் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வுரிமையை பறித்து வருகின்றது. சுற்றுச் சூழல், உயிர் சூழல் நிலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்வுரிமை பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது.
இந்த சமுதாய அமைப்பு இறுக்கமான, முரண்பாடுள்ள, ஏற்றத் தாழ்வுள்ளதாக உள்ளது. வாங்குபவன் கொடுப்பவன் உறவுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடுவது, பெட்டிசன் (மனு) போடுவது, பயனாளியாக இருப்பது என்றுதான் மக்களை பழக்கி இருக்கின்றோம். குடிமக்களாக (விவரம் தெரிந்தவர்களாக) பழக்கவில்லை. சுதந்திரம் வாங்கியும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. நிறைய பேருக்கு சினிமாவை பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்திருக்கின்ற அளவிற்கு அரசியல் சட்டம் பற்றி தெரியவில்லை. உலக அரங்கில் இந்தியா பொருளாதார கட்டமைப்பில் 8வது இடம், மனிதவள மேம்பாட்டில் 127 மிலி 137வது இடம். ஆனால் மனிதனை மனிதனாக வாழவைக்க வேண்டிய இடத்தில் இல்லை.
உள்ளாட்சி வரலாறு :-
இந்தியாவில் உள்ளாட்சி வரலாறு என்பது நூற்றாண்டுக்கு மேல் கொண்டது. தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகள் இருந்துள்ளன. 1871ல் உள்ளாட்சிகள் நிதி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1884ல் சென்னை உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சுய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டமாக அமைந்தது. 1907ல் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகார பரவலாக்கத்திற்கான ராயல் ஆணையம் (யூலிதீழியி உலிதுதுஷ்விவிஷ்லிஐ க்ஷூலிr deஉeஐமிrழியிஷ்விழிமிஷ்லிஐ) உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக 1920ல் உள்ளூர் வாரியங்கள் சட்டம் சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிந்தைய கால கட்டங்களில் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தின் போது உள்ளாட்சிகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஒரு சுதந்திர நாட்டின் அரசியல் கட்டமைப்பு கிராமத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்தால்தான் அது வலுவான அஸ்திவாரமாக அமையும். அதாவது வலுவான கிராம பஞ்சாயத்துகளின் அதிகார பரவலாக்கல் என்பது கிராமத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும். அதன் அடிப்படையில் 1948 நவம்பர் 22ல் அரசு நெறிமுறை கோட்பாடுகளின் கீழ் ஊராட்சிகளை அமைத்துருவாக்கல் (நுrஆழிஐஷ்விழிமிஷ்லிஐ லிக்ஷூ ஸஷ்யியிழிஆe ஸ்ரீழிஐஉஜுழிதீழிமிவி) அமைந்தது. பல்வேறு ஆய்வுகள், கோரிக்கைகளின் விளைவாக பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது 1958ல் மத்திய அரசால் பலவந்தமாய் மேத்தா தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதிகார பகிர்வு தேவை என்றும், சமுதாய வளர்ச்சிப் பணிகளிலும், தேசிய விரிவாக்கப் பணிகளிலும் பொதுமக்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென்றும், இவற்றில் அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு கூறியது. இந்தப் பின்னனியில் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் கூட்டம் 1958ல் உருவாக்கப்பட்டன.
அதிகார பரவலாக்கம் :-
“சுதந்திரம் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக விளங்கிட வேண்டும். ஒவ்வொரு குடியரசும் சுயமாக தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் அகில உலகத்திற்கு எதிராக தன்னை காத்துக் கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேல்மட்ட அமைப்புகள் வழிகாட்ட வேண்டுமேயல்லாமல் ஆணையிடக் கூடாது. அதிகார பரவல் இருக்க வேண்டும்” என்றார் தேசபிதா அண்ணல் காந்தியடிகள். “வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடவும், செயல்படுத்துவமான பொறுப்பினை மக்களிடமே ஒப்படைத்துவிட வேண்டிய நேரம் வந்து விட்டது” என்றார் பண்டிதர் நேரு.
ராஜீவ் காந்தி கனவு :-
மக்களை மதித்தல், மக்களை நம்புதல், அவர்களை அதிகாரப்படுத்துதல், அவர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயம் செய்தல்.
அதிகார பரவலாக்கலின் அடிப்படை :-
- மக்களின் சுய மரியாதையை பாதுகாத்தல்.
- அரசியலில் மக்களின் நெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும்.
- பயனாளி அல்ல குடிமகன் என்ற உணர்வு வரவேண்டும்.
- அரசிற்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
- மக்கள் பார்வையாளராக வைக்கப்பட்டிருக்கிறார்கள். பங்கேற்பாளர்களாக வைக்கப்பட வேண்டும்.
- முன்னேற்றத் திட்டத்தில் மக்கள் பங்கேற்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
- அடிப்படையில் ஜனநாயகம் கீழிருந்து வரவேண்டும்.
- மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
- ஒளிவு மறைவற்ற நிர்வாகம் இருக்க வேண்டும்.
- தீர்மானிப்பதில் குடிமக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
- சமூக நீதி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
- திட்டமிடல் கீழிருந்து வரவேண்டும்.
- மக்களின் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
1984ல் பாரதப் பிரதமராக இருந்து இந்திராகாந்தியின் மறைவிற்கு பிறகு பதவியேற்ற ராஜீவ் காந்தி மக்களை அதிகாரப் படுத்தல், பரவலாக்கல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அதன் அடிப்படையில் மாநில முதல்வர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோரிடம் விரிவாக விவாதம் நடத்தினார்.
விவாதங்களின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டவைகள் :- (Diagnosis)
- பொறுப்பான நிர்வாகம் இல்லை.
- மக்கள் விளிம்பில் (கடைக்கோடியில்) இருக்கிறார்கள்.
- அதிகார தரகர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
- வலுவான மத்திய மாநில அரசுகள், ஆனால் பலவீனமான ஜனநாயகம்.
- தலித்துகள், மலைவாழ் மக்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளனர்.
- திறமையற்ற, கருணையற்ற, அனுபவமற்ற கொடூரமான நிர்வாகம்.
- மிகக் குறைந்த அளவில் சேவை.
- அதிகமான நிர்வாக செலவுகள்.
- அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை.

ஆலோசனை :-
- நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் (Representative administration)
- பெண்கள் மற்றும் விளிம்பில் உள்ளவர்களை இணைத்தல் (Inclusion of women & marginal)
- அடிப்படையிலிருந்து வழிமுறை உருவாக்குதல் (Creation of system at the grass root)
- முன்னேற்ற கண்ணோட்டம்.
- ஜனநாயக வழிமுறைகள்.
- ஏழைகளுக்கான செயல்பாடு.
- கீழிலிருந்து திட்டமிடல்.
- சமூக பொருளாதார முன்னேற்றம்.

தீர்வு :-
புதிய பஞ்சாயத்துராஜ் திட்டம் :-
மாநிலப் பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்து அமைப்பு பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு 64 வது சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்ட திருத்தம் போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனையை முன்வைத்து தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் நரசிம்மராவ் பிரதமரானவுடன் 1992ம் ஆண்டு 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியல் சட்டம் :
3 முக்கிய பிரிவுகள் :
1. சட்டத்துறை - சட்டமன்றங்கள், பாராளுமன்றம்.
2. நிர்வாகத்துறை
3. நீதித்துறை

சட்டமன்றங்கள் :-
மாநில சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.

மாநில பட்டியல் துறைகள் :-
(1) காவல்துறை (2) பொதுப்பணித்துறை (3) விவசாயம் (4) கூட்டுறவு (5) சாலை போக்குவரத்து (6) கள், சாராய வரிவிதிப்பு (7) விற்பனை வரி (8) சினிமா சம்பந்தப்பட்ட வரிகள்.
பாராளுமன்றம் :-
மத்திய பட்டியலில் உள்ள துறைகள் சம்பந்தப்பட்ட சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.

மத்திய பட்டியல் :-
(1) ராணுவம் (2) ரயில்வே (3) சுரங்கம், (4) தபால் தந்தி, தொலைபேசி (5) வங்கி மற்றும் இன்சூரன்ஸ் (6) சுங்கவரி (7) வருமானவரி (8) கம்பெனி நிர்வாகம் (9) தேசிய நெடுஞ்சாலை (10) அணு ஆயுதம்.

பொதுப் பட்டியல் :-
(1) கல்வி (2) சில வரிகள் (3) வேலை வாய்ப்புத் திட்டங்கள்.

பொதுப் பட்டியலில் உள்ள சட்டங்களை பாராளுமன்றமும், சட்டமன்றமும் இயற்றலாம், பாராளுமன்றத்தின் அதிகாரம் சற்று அதிகம். சட்டமன்றங்கள் மத்திய அரசை மீறிய செயல்களில் ஈடுபட முடியாது. 1992ல் அரசியல் சாசன 73வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
73வது சட்ட திருத்தம் - கிராமங்கள் சம்பந்தப்பட்டது.
74வது சட்ட திருத்தம் - நகரங்கள் சம்பந்தப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் தற்போதைய பஞ்சாயத்துராஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1993 ஏப்ரல் 20ல் மாநில பட்டியலில் இருந்து வந்த பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1958ம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994 ஆனது, 73வது சட்ட திருத்தத்தில் உள்ள அனைத்து விதிகளும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்திற்கு பொருந்தும்.
   அஸ்தம்பட்டியார் சேதுபதி மாரியப்பன் இந்திய அரசியல் பயிலரங்கம் அவர்களுக்கு நன்றிங்க!.

காவல்துறை அமைப்பு விவரம்.....


மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.காவல்துறை பற்றிய விவரம் தங்களது  விழிப்புணர்வுக்காக.......
               தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.
   வரலாறு
                 முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) க்கு உட்பட்டு  துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 ஆம் தேதியிலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 ஆம் தேதியிலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
தமிழக காவல்துறை 1659 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது.
       துறை அமைப்பு,
காவல்துறை தலைமை இயக்குநர் - திரு.
மொத்த காவல் மண்டலங்கள் நான்கு,
மொத்த காவல் ஆணையரகம் ஏழு,
மொத்த காவல் மாவட்டங்கள் முப்பத்திரண்டு,
மொத்தக் காவல் நிலையங்கள் - 1452,
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்-196,
மொத்தக் காவல் பரப்பு - 1,30,058 சதுர கிலோமீட்டர்.
இந்திய காவல் பணி அலுவலர்கள்-186.
 ( இந்தப்பதிவு என்னறிவுக்கு எட்டியவரையில் சேகரித்த தகவல்கள் ஆகும்.சிறிது மாறுதல்கள் மற்றும் குறைகள் இருக்கலாம்.பொருத்தருள வேண்டுகிறேன்.அல்லது பிழை இருப்பின் திருத்திட உதவ வேண்டுகிறேன்.என பரமேஸ்வரன் .சி, செயலாளர் ,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு)
                          விளக்கம்
                      தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
                   தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
                         தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
                    நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.
  
 காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
  1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
  2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
  6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  7. பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
  9. இரயில்வே காவல்துறை (Railways)
  10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
  12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
  13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
  14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
  15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
  16. பயிற்சிப் பிரிவு (Training) 


பதவி பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IGP) ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (JSP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Inspector) மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (Sub-Inspector) இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் (Head Constable) சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I) சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) பட்டை எதுவுமில்லை.

 தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணைதான் மேற்கண்ட அட்டவணை தங்களது கவனத்திற்காக.......

 உச்ச நீதிமன்றத்தின் ஏழு கட்டளைகள்

2006-ல் உச்ச நீதிமன்றம் ஏழு கட்டளைகளை அறிவித்து அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அவை
  1. மாநிலப் பாதுகாப்பு ஆணையம் அமைத்து, அரசு காவல் துறை மீது செல்வாக்கும் நிர்ப்பந்தமும் செலுத்தாமல் பார்க்க வேண்டும்.
  2. தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும் பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாகவும் இருக்க வேண்டும்.
  3. எல்லா உயர் அதிகாரிகளும், காவல் நிலைய அதிகாரிகளும் குறைந்தது இரு வருடம் பொறுப்பில் இருக்க வேண்டும்.
  4. சட்டம் - ஒழுங்கு பொறுப்பையும் குற்றப் புலனாய்வுப் பொறுப்பையும் தனித் தனிப் பிரிவுகளாக்க வேண்டும்.
  5. காவலர்கள் அனைவரின் நியமனம், இட மாற்றம், பதவி உயர்வு, இதர நடவடிக்கைகள் அனைத்தையும் சுயேச்சையான காவல் நிர்வாக வாரியம் அமைத்து மேற்கொள்ள வேண்டும்.
  6. காவலர்கள் யார் மீதான புகார்களானாலும், அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநில, மாவட்ட அளவிலான புகார் ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும்.
  7. மாநில அரசுகளைப் போலவே மத்திய அரசு கீழ் இருக்கும் காவல் பிரிவுகளுக்கும் சுயேச்சையான தேசியப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் - இந்த ஒவ்வொரு கட்டளையையும் எப்படிச் செயல்படுத்த வேண்டும், யாரை உறுப்பினராக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஓரளவு விரிவாகவே சொல்லியிருக்கிறது.
ஒரு வருடம் கழித்து நிலைமை என்னவென்று நீதிமன்றம் கேட்டால், பல மாநிலங்கள் பதிலே தரவில்லை. சில அரசுகள் அவகாசம் கேட்டன. சில அரசுகள் சொன்னபடி செய்துவிட்டதாக, சில அரசாணைகளை வெளியிட்டன. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக குஜராத், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மீது மனுதாரர் பிரகாஷ் சிங் வழக்குத் தொடுத்தார். தொடர்ந்து, அரசுகள் கால அவகாசம் கேட்டன. 2008-ல் நீதிமன்றம் மாநில அரசுகள் செய்த நடவடிக்கை என்ன என்று ஆராய கண்காணிப்புக் குழுவை நியமித்தது.
தமிழ் விக்கிப்பிடீயா வலைத்தளத்திற்கு நன்றிங்க!...

உணவுப்பொருட்களில் கலப்படமா? கண்டுபிடிக்க இதோ.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 

உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?

     இந்த தகவல் தங்களுக்கு தோராயமான கண்டுபிடிப்புக்கான வழி...மற்றபடி தங்களுக்கு துல்லியமான கண்டுபிடிப்புக்கு ஆய்வகம் ஒன்றே தீர்வு ஆகும்.
 கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.
உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி செய்யப்பட்டுள்ளதேயொழிய, இனிமேல் வரக்கூடிய கலப்படத்தைப் பற்றி எதுவும் இங்கே கூறவில்லை. தோற்றத்திலோ அல்லது குணத்திலோ ஓரளவு ஒத்திருக்கும் சில கலப்படப் பொருட்களை தேடிப்பிடித்து உணவுப் பொருட்களில் கலப்படத்தைச் பெருக்கி வருகின்றனர் சில வணிகர்கள். அவற்றைத் தடுக்கும் சிறு முயற்சி இது.
எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
குறிப்பிட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே கலப்படமான பொருள் என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும்.
1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்
கலப்படப்பொருள் : வனஸ்பதி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும்.
கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் விடவும். பழுப்புநிறமுள்ள டிஞ்சர் அயோடின் நீல நிறமாக மாறினால் கலப்படம் நடந்திருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது.
2.உணவுப் பொருளின் பெயர் : பால்
கலப்படப்பொருள் : தண்ணீர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.
2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்தமான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும்.
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலில் சிறிதளவு டிஞ்சர் அயோடினைச் சேர்க்கவும். அது நிறம் மாறி நீலநிறமானால் மாவுப் பொருள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.
3.உணவுப் பொருளின் பெயர் : கோவா
கலப்படப்பொருள் : மாவுப் பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேலே சொன்னவாறு இதற்கும் செய்யவும்.
4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும்.
5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்
கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இரண்டு மில்லி மாதிரி எண்ணெயுடன் அதே அளவு எண் 2 ஆல்காலிக் பொட்டாஸைச் சேரக்கவும். அக்கலவையை சுமார் 15 நிமிடங்கள் கொதி நீரில் சூடுபடுத்திவிட்டு அதில் 10 மில்லி தண்ணீரைக் கலக்கவும். ஏதேனும் கலங்கல் தென்பட்டால் தாதுப்பொருள் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனைகள் குறைந்த அளவில் செய்யப்பட்டு உள்ள கலப்படத்தைக கண்டுபிடிப்பதற்கு அல்ல.
கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு எண்ணெயுடன் கொஞ்சம் பெட்ரோலியம் ஈதரை விட்டுக் கரைக்கவும். அக்கலவையை உறை பனி கலவைக்கு நடுவில் வைத்து சிறிது நேரம் குளிர வைக்கவும். ஐந்து நிமிடத்தில் கலங்கல் தென்பட்டால் விளக்கண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது விளங்கும்.
6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன.
கலப்படப்பொருள் : மெடானில் எல்லோ (இது ஒரு அனுமதிக்கப்படாத நிலக்கரித்தாரின் சாயம்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சம்பந்தப்பட்ட பொருளில் இருந்து வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு சாயத்தை தனியாக எடுக்கவும். சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடும் போது மெஜந்தர் சிவப்பு நிறம்தோன்றுமானால் மெடானில் எல்லோ என்ற சாயம் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது என்பதாகும்.
7.உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள் : கேசரி பருப்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள்.
முன் எச்சரிக்கை :
இந்த சோதனை கேசரிப் பருப்பை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்
கலப்படப்பொருள்: களிமண், சிறு கற்கள், சரளைக்கற்கள் போன்றவை (கால்சியம் குரோமேட் மஞ்சள்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம்.
8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்
கலப்படப்பொருள் :மாக்கல்லின் தூள் அல்லது மண் சம்பந்தப்பட்ட பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கவும். மாக்கல்லாயின் தூள் அல்லது மண் தூள்கள் தானாக அடியில் தங்கிவிடும். சுத்தமான பெருங்காயம் நீரில் கரையும் போதுமான வெள்ளை நிற கரைசலாகும். அது நெருப்பில் கொளுத்தினால் மஞ்சள் நிறத்தில் எரியும்.
முன் எச்சரிக்கை :
கூட்டுப் பெருங்காயத்தில் மாவுப் பொருள் இருப்பதால் ஒரு சிறிது கலங்கல் ஏற்படும் எனினும் சிறிது நேரத்தில் ஙீழே படிந்துவிடும்.
உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்
கலப்படப்பொருள் : மாவுப்பொருள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
பாலுக்குச் செய்த அதே சோதனையைத் தான் இதற்கும் செய்யவேண்டும்.
9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலை
கலப்படப்பொருள் :சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை அல்லது நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
1. இதனை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
2. வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.
10.உணவுப் பொருளின் பெயர் : சர்க்கரை
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
சிறிதளவு மாதிரியை எடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் சாக்கட்டித்தூள் அடியில் படிந்துவிடும்.
11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகு
கலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம்.
கலப்படப்பொருள் : சொத்தை மிளகு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எரிசாராயத்தின் (ஸ்பிரிட்) மேல் சொத்தை மிளகு மிதக்கும்.
12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்
கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு.
13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்
கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை போடவும். கலப்படத்தூளானால் சாயம் கரைந்து மேலாக வர செங்கல் தூள் ஙீழே படியும். மேலும் வீழ்படிவம் வெண்மையாகவும், வழுவழுப்பாகவும் காணப்பட்டால் சோப்புக்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும்.
முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும்.
கலப்படப்பொருள் : வண்ணம்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும்.
14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்
கலப்படப்பொருள் : சிக்கரி
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும்.
கலப்படப்பொருள் : புளியங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
15. உணவுப் பொருளின் பெயர் : தூள் வெல்லம், வெல்லம்.
கலப்படப்பொருள் : சலவை சோடா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம்.
கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும்.
16 . உணவுப் பொருளின் பெயர் : ரவை
கலப்படப்பொருள் : இரும்புத்தூள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும்.
17. உணவுப் பொருளின் பெயர் :அரிசி
கலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
உள்ளங்கையில் சிறிது அரிசியை வைத்து கையை சிறிது சிறிதாக நீரில் அமிழ்த்தினால் கற்கள் நீரில் மூழ்கிவிடும். அரிசி மிதக்கும்.
18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)
கலப்படப்பொருள் : மைதா மற்றும் ரவை எடுத்துவிட்டபின் உள்ள ஆட்டா
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
இப்படிப்பட்ட மாவினால் சப்பாததி தயாரிக்க அதிக நீர் விட்டு பிசைய வேண்டியிருக்கும். இதில் சப்பாத்தி தயாரித்தால் சற்று இறுகலாக இருக்கும். சுத்தமான மாவில் தயாராகும் சப்பாத்தி சிறிதளவு இனிப்பாக இருக்கும். ஆனால் கலப்பட மாவில் தயாரிக்கும் சப்பாத்தி சுவையற்றதாக இருக்கும்.
19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்பு
கலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளைக் கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமான பொருட்கள் கிழே படிந்துவிடும்.
20. உணவுப் பொருளின் பெயர் : தேன்
கலப்படப்பொருள் : சர்க்கரைப்பாகு (தண்ணீரும சர்க்கரையும் கலந்தது)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கொஞ்சம் பருத்தி திரியை சுத்தமான தேனில் நனைத்து தீக்குச்சியால் பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரியும். கலப்படத் தேனாக இருந்தால் அது எரியாது. அப்படியே எரியத்துவங்கினாலும் பட் பட் என வெடிச்சத்தத்துடன் எரியும்.
முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு.
21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்
கலப்படப்பொருள் :கரித்தூள் பூசிய புல் விதைகள், குப்பைக்ஙீரை விதைகள்
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
விரல்களால் கசக்கிப் பார்த்தால் விரலில் கரி படிந்தால் கலப்படம் என முடிவு செய்துவிடலாம்.
22. உணவுப் பொருளின் பெயர் : கடுகு
கலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள்.
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
கடுகு மேற்பரப்பு வழவழப்பாக இருக்கும். நாய் கடுகு போல் சொறப்பாகவும், மிகக் கறுப்பாகவும் இருக்கும். நிற வித்தியாசம் கூர்ந்து நோக்கினால் தெரியும்.
23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.
கலப்படப்பொருள் :நச்சுத்தன்மையுடைய காளான் விதைகள் (எர்காட்)
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
செந்நிற கருப்பு கலந்த நீண்ட தானியங்கள் சோளத்தில் இருந்தால், கலப்படம் இருபது சதவீதம். உப்புத்தண்ணீரில் தானியங்களைப் போட காளான் வகை தானியம் மிதக்கும். நல்ல தானியங்கள் நீரின் அடியில் படியும்.
24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்பு
கலப்படப்பொருள் :எண்ணெய் எடுத்த கிராம்பு
கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
எண்ணெய் எடுத்த கிராம்பு சுருங்கிப் போய் இருக்கும்.