Monday 29 June 2015

ஹெல்மெட் விழிப்புணர்வு -பதினொன்றாவது நாள்

                                        நம்ம தாளவாடியில் இன்று...
மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தலைக்கவசம் நமது உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி  பதினொன்றாவது நாளாக இன்று தாளவாடி வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம்,தலைமை தபால் அலுவலகம்,நெடுஞ்சாலை துறை அலுவலகம்,ஊராட்சி மன்றம்,அரசு மருத்துவமனை,டெம்போ ஸ்டேண்டு,கடைகள்,இருசக்கர வாகன பணிமனைகள்,புரொபசனல் கூரியர் அலுவலகம்,சமூக சேவை சங்க அலுவலகம்,உட்பட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.



 திரு.கல்வி மேற்பார்வையாளர் ஈரோடு அவர்கள் ,தாளவாடியில்
திருமதி.R.ராஜம்மா அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில்  தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தலைக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.அனைவருக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
 திரு.C. பரமேஸ்வரன்,அவர்கள் (செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்) தலைமை ஆசிரியப்பெருமக்கள் முன்னிலையில் விழிப்புரை வழங்கியபோது....
மருத்துவர்.பாலசுப்ரமணியம் அவர்கள் அரசு மருத்துவமனை,தாளவாடி தலைக்கவசம் அணிவோம் பற்றிய துண்டறிக்கையினை பார்வையிட்டபோது....




 ஊராட்சி மன்றம் தாளவாடி
  டெம்போ ஸ்டேண்டு ஓட்டுநர்களிடம் தாளவாடி.
 நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தாளவாடியில்
  இரு சக்கர வாகன பணிமனை தாளவாடி.

புரொபசனல் கூரியர் தாளவாடியில்...