Tuesday 30 April 2013

நுகர்வோர் உரிமைகள் வளர்ந்தது எப்படி?

 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
      

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
  இங்கு நுகர்வோர் உரிமைகள் வளர்ந்த விதம் பற்றி காண்போம்.
   தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு  தொழில் அமைப்புகளில் மாற்றம் உண்டானது.அதாவது உற்பத்தி பெருக்கமும்,நவீன சந்தை வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்தது.இந்த கால கட்டத்தில் பொருள்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்களை வழிநடத்தி,பாதுகாத்து, பொருட்களின் தரம்,அளவு,குணம் எதுவும் குறையாமல் கொடுத்த பணத்திற்கு ஏற்றவாறு நுகர்வோர் பெற்று அனுபவிக்க சில நெறிமுறைகள் தேவைப்பட்டன.இதற்காகத்தான் அமெரிக்காவில் 1899-ஆம் ஆண்டு நுகர்வோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

             

No comments:

Post a Comment