Tuesday 30 April 2013

இந்தியாவில் நுகர்வோர் குழுக்கள்

 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.

                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                              இந்த பதிவில்  இந்தியாவில் நுகர்வோர் குழுக்கள் விவரங்கள் பற்றி காண்போம்.
                    1970 களில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் நுகர்வோர் குழு செயல்பட்டு வந்துகொண்டு இருக்கிறது.அதில் பேராசிரியர் புஷ்பவனம்,திரு.முத்துவேலன்,பேராசிரியர் சீனிவாச நாராயணசாமி,வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம், மற்றும் தினமலர் ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் நுகர்வோர் குழுவில் ஈடுபட்டு இருந்தனர்.
                           தென் மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நுகர்வோர் குழுக்கள்கிராம ப்புறங்களிலும் உருவாகி நன்கு செயல்பட்டு வருகின்றன.
                       இந்தியாவில் இன்று ஆயிரக்கணக்கான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
 இந்தியாவில் உள்ள அனைத்து நுகர்வோர் குழுக்களை இணைத்து இந்திய நுகர்வோர் குழுக்களின் பேரமைப்பு (confederation of indian consumer organisation ) CICO - சீகோ  என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
                         தமிழ்நாட்டில் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT - Federation of Consumer Organisations in Tamil Nadu என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதை ஆரம்பித்த பெருமக்கள் திரு.தளவாய்,  திரு.தேசிகன்,  திரு.ஹென்றி டிஃபேன்,  திரு.சேவியர்,  பேராசிரியர் தங்கவேல் மற்றும் சிலராவர்.

    
 

No comments:

Post a Comment