மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இன்று தலைக்கவசம் உயிர்க்கவசம் என ஒன்பதாவது நாள் தொடர்ச்சியாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.இன்று மதியம் நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து பண்ணாரியில் உள்ள மோட்டார் வாகன சோதனைச்சாவடி,காவல்துறை சோதனைச்சாவடி,வனத்துறை சோதனைச்சாவடி,வணிகவரித்துறை சோதனைச்சாவடிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி அந்த வழியாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்,பயணிகளுக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புரை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.மற்றும் பண்ணாரியில் இருந்த பக்தகோடிகளுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டது.
Dr.P.வெங்கடாச்சலம்,B.A.,M(ACU).,M(Sidha).,அவர்கள்(கோபி செட்டிபாளையம்) நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்
அவர்களும் 'ஹெல்மெட் விழிப்புணர்வு' பிரச்சாரத்தில் தன்னார்வத்துடன் பங்கேற்று துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு-மோட்டார் வாகன சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- வனத்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- காவல்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- வணிகவரித்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
No comments:
Post a Comment