Sunday 26 April 2015

இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் -சாணார்பாளையத்தில்....



மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.





 2015ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இன்று திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் கோபி அச்சக உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சையினை கொளப்பலூர் சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடத்தியது.




 சாணார்பாளையம் பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கொளப்பலூர்,தாழ்குனி,சிறுவலூர்,கெட்டிச்செவியூர் வட்டார பொதுமக்கள் வருகை தந்து சிகிச்சை பெற்றனர்.

 கொளப்பலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சாணார்பாளையம் மருத்துவ முகாம் வரை இலவச வாகன வசதியினை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை  ஏற்பாடு செய்து இருந்தது.

No comments:

Post a Comment