Monday 9 March 2015

நமக்கு தெரிவிக்காமல் நமது வங்கி கணக்கை முடிக்க முடியாது..

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். நம்மிடம் தெரிவிக்காமல் நம்முடைய வங்கி கணக்கை முடிக்க முடியாது..இதோ ஒரு உதாரணம்.
 

வாடிக்கையாளருக்கு முன்கூட்டி தகவல் அளிக்காமல், வங்கிக் கணக்கை          முடிக்க முடியாது என்று டெல்லி நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானரில் கணக்கு வைத்திருக்கும் டெல்லி, கரோல்பாக் பகுதியைச் சேர்ந்த பிரபாகரின் வங்கிக் கணக்கில் சமீபத்தில் இரண்டு காசோலைகளை பரிமாற்றம் செய்த வங்கி, மூன்றாவது காசோலையை காரணம் கூறாமல் நிராகரித்தது. கேட்டதற்கு, ‘கே.ஒய்.சி. எனப்படும் அடையாள ஆவணங்கள் தரவில்லை’ என்று கூறி, வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
‘எனக்கு தகவல் தெரிவிக்காமல் இப்படி செய்தது முறையல்ல. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளானேன்’ என்று கூறி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார் பிரபாகர். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர்மன்றம், ‘வாடிக்கையாளருக்கு தகவல் தராமல் கணக்கை வங்கி தன்னிச்சையாக முடிக்க முடியாது. கே.ஒய்.சி. விதிமுறைகளை வாடிக்கையாளர் அளிக்க வேண்டியதை முன்கூட்டி தெரிவித்திருக்க வேண்டும். இது சேவைக் குறைபாடு. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது கணக்கைத் தொடரவும் வங்கிக்கு உத்தரவிடுகிறோம்’ என்று தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment