Saturday 28 September 2013

துவக்கவிழா அழைப்பு.01-அக்டோபர் 2013

மரியாதைக்குரியவரே,

       


வணக்கம்.
''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' துவக்கவிழா அழைப்பு காணீர்.
                 அக்டோபர் 02-ம் தேதி, இளைய சமூகம் ''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடையே  கருத்து சேகரிப்பு இயக்கம் செய்து கருத்துக்களை ஒருங்கிணைத்து சுருக்கி அதன் சாரத்தை அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
          
               அக்டோபர்-03-ம் தேதி,  சத்தியமங்கலம் அனைத்து பள்ளி மாணவர்கள் போதை தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி காலை 9.30மணிக்கு நடக்க உள்ளது.

            அக்டோபர் 04 ம் தேதி, காலை 07-00 மணி முதல் மாலை 06-00 மணி வரை  வாகன ஒலி பெருக்கி பிரச்சாரம் மற்றும் தாளவாடி பள்ளியிலும் ஆசனூர் பள்ளியிலும் கருத்தரங்கம் நடக்க உள்ளது.அப்போது  அனைத்து சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி கிளப்,ஒய்ஸ்மென் கிளப்,கல்வியாளர்கள்,பொதுமக்கள்,மாணவர்கள்,அரசு துறைகள் அனைவரும் கலந்து கொண்டு கருத்தரங்கத்தில் விவாதிக்க உள்ளார்கள்.

               அக்டோபர் 05 ம் தேதி காலை 07-00 மணி முதல் மாலை 07-00மணி வரை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்,தூக்க நாயக்கன்பாளையம்ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

    அக்டோபர்-06 ம் தேதி கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம்,நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்,பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
    
         அக்டோபர் 07-ஆம் தேதி சத்தியிலிருந்து கோபி வரை ''போதை தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம்'' -விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.


  சைக்கிள் பேரணியில்  காமதேனு கலை அறிவியல் கல்லூரி- சத்தியமங்கலம் மாணவர்களும்,கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம். மாணவர்களும்  (ஐம்பது நபர்கள்)  கலந்துகொண்டு போதை தவிர்ப்பு விழிப்புரை செய்ய உள்ளார்கள்.அது சமயம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்றம் அருகில்
          ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு''. சார்பாக வரவேற்று அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
         அடுத்து காசிபாளையம்- பண்ணாரிஅம்மன் போட்டோ ஸ்டுடியோ நிர்வாகி, அவர்கள் காசிபாளையத்தில் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து வரவேற்று சிறப்பிக்க உள்ளார்.
    அடுத்து கோபி சீதா கல்யாண மண்டபத்தில் ''கோபி-அச்சக உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்புக்குழு'' சார்பாக சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்று- வாழ்த்தி மதிய உணவு கொடுத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

                அக்டோபர்-08 ம் தேதி நிறைவு விழா- கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்,KMR நினைவு அரங்கத்தில் மதியம் 2-30 மணிக்கு நடைபெற உள்ளது.சிறப்புரை ஆற்ற மரியாதைக்குரிய ஈரோடு கதிர் அவர்கள் ''வாழ்வும்-பொறுப்பும் நம்மிடமே'' என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்.
    வலைப்பதிவு வாசக பெருமக்களே,உங்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம்.,
           இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' பற்றிய  தங்களது சமூக சிந்தனையுள்ள மேலான  கருத்துக்களை, 

                      consumerandroad@gmail.com  
        என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                 நன்றிங்க.
   என சமூக நலன் கருதி,
 அன்பன்,
 C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்:-26 / 2013

No comments:

Post a Comment