Monday, 2 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை


        SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (ஐந்து)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
ASHA KENDRA-3704 SOOSAIPURAM (THALAVADI) & CHILD FUND INDIA     
    சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை-2015


 02.02.2015திங்கட்கிழமை இன்று காலை 10.30மணிக்கு


  தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட சூசைபுரம் CCF என்னும்
 'ஆஷாகேந்திரா சமூக நல அமைப்பு' உறுப்பினர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நடத்தப்பட்டது.அதன் புகைப்படத்தொகுப்பு தங்களது பார்வைக்காக.....

 விழிப்புணர்வு விழா துவக்கமாக இறைவணக்கம் பாடியபோது........
 சாலையின் பாகங்கள் மற்றும் வரைகோடுகள் பற்றிய விளக்கப்படம்...
         திரு.C.பரமேஸ்வரன்,
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அமைப்பின் செயலாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புரையில்
               சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு  என்பதை உணர்ந்து சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்யும் நாம்தான் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். ஆனால் நமது சாலை விதிகளை, போக்குவரத்துச்சின்னங்களை, சாலையின் தன்மைகளை, வாகனங்களின் இயக்க விதிகளை,வாகனம் 
ஓட்டும் முறைகளை,தெரிந்துகொள்ளாமலும்,போக்குவரத்துச் சட்டங்களை மதியாமையாலும்,அறியாமையாலும்,மீறுவதாலும் விபத்து ஏற்பட்டு கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு வருமான இழப்புகளுடன் பல்வேறு வேதனைகளையும் அனுபவித்து,மனநிம்மதியையும் இழந்து  எதிர்காலத்தையே வீணடித்துவிடுகிறோம்.விபத்து ஆய்வாளர்கள் கருத்துப்படி வாகன ஓட்டிகளால் 80சதவீதமும்,மோட்டார் வாகனத்தால் 10சதவீதமும்,பிற வகைகளால்10 சதவீதமும் விபத்துக்கு காரணம் என்கின்றனர்.எனவே சாலையில் கவனமாக பயணித்து நம்மையும் காத்து மற்றவர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பும்,கடமையும் ஆகும் என்று விழிப்புரை வழங்கியபோது பாதசாரிகளாக போக்குவரத்து செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும்,பாதுகாப்பு முறைகளையும் விளக்கினார்.
      திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் விழிப்புரையில், சாலையின் பாகங்கள் மற்றும் வரைகொடுகள் பற்றியும், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையில் பயணிப்பது பற்றியும்,சாலையை கடக்கும்போது கவனத்தின் பாதுகாப்பு பற்றியும்,பயணிகளாக பேருந்து,ஆட்டோ,வேன் என பயணிகளுக்கான வாகனத்தில் பாதுகாப்பாக பயணிப்பது பற்றியும் விளக்கினார்.

  திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் கருத்துரையில்,
              வாகனம் பற்றிய அடிப்படை அறிவு தெரிந்து வைப்பது பற்றியும்,இயக்கவிதிகள் பற்றியும்,வேகமும்,அதற்கான காலமும் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
         திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் விழிப்புரையில்,
                 அனைவருக்கும் பொதுவான சொத்து உடல் நலமும், மன நலமும் ஆகும் என்று கூறியபோது  புகை பிடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படையும்,மூளை செயலிழப்பு ஏற்பட்டு மன நோயாளி ஆகும் நிலை ஏற்படும்.புற்றுநோய்,இதய நோய்,மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றபோது புகைத்தலின் தீங்கு பற்றி செயல்விளக்கம் காட்டிய காட்சி.........

                புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்,புகையிலை,போதைப்பாக்கு போன்ற போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றி விரிவுரை செய்தபோது புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல்விளக்கம் காட்டி விழிப்புணர்வு கொடுத்தார்.
 நிறைவாக அனைவருக்கும் நன்றி கூற சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கல்வியுரை நிறைவு பெற்றது.

Friday, 30 January 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

           
  SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (நான்கு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
    அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளி,தாளவாடி
         (5)சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல.அது வாழ்க்கை முறை.


  அரசு மேல்நிலைப் பள்ளி- பனகஹள்ளி (தாளவாடி)யில்
 30.01.2015இன்று மாலை3.00மணிக்கு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 வரவேற்புரை;திருமதி பட்டதாரி ஆசிரியை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை;திரு.M.பசவண்ணா அவர்கள்,உதவி தலைமை ஆசிரியர்..

திரு.பரமேஸ்வரன் C அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கம் அளித்தார்...


 திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் (ஷிட்டோ-ரியூகராத்தே மாஸ்டர் ) புகை,மது,போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றி மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.


 புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

திரு.பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே நிறைவடைந்தது.

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல - அது வாழ்க்கைமுறை

                   

                                   SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (மூன்று)
  


மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


 தாளவாடியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி சிக்கள்ளியில்
 30.01.2015இன்று காலை 10.00மணிக்கு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பணிச்சூழல் காரணமாக திரு.H.V.ரங்கராஜ் அவர்கள்  தலைமை ஆசிரியர்  மற்றும் திரு.M.ஜடேசாமி அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் தாங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.தம் பள்ளி மாணவக்குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புரை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.அதன்படி நடைபெற்ற விழாவில்

தலைமையுரை;திரு.M.சரவணக்குமார் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்.
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளி (தாளவாடி)


துவக்கவுரை;திரு.வே.மனோரஞ்சித் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளி (தாளவாடி)
       சிறப்புரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கியபோது....
           சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் என இரு சக்கர வாகனம் முதல் கார்,டெம்போ,பஸ்,லாரி என கனரக வாகனங்கள் வரை ஓட்டுபவர்களாக சாலையில் போக்குவரத்து செய்யும் நாம்,சாலை விதிகளையும்,போக்குவரத்து சின்னங்களையும்,சைகைகளையும்,அறியாமலும்,அலட்சியம் செய்தும்,ஆத்திரத்தாலும் விபத்து ஏற்படுத்துகிறோம்.வாகனம் பற்றிய முன் பரிசோதனை பற்றியே தெரியாமல்,பழுதுகள் பற்றி அறியாமல் விபத்துக்களை ஏற்படுத்துகிறோம்.என்றார்.மனநலமே அனைவருக்குமான பொது சொத்து.அதனால் மனநலத்தை காக்க உடல் நலத்தை காக்க வேண்டும் என்றார்.புகை,மது,போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியபோது....புகைத்தலினால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு செயல் விளக்கம் காட்டினார்.













  புகைத்தலினால் ஏற்பட்ட தீங்கினை மாணவ,மாணவியருக்கு காட்டியபோது....

திரு.த.முத்துமணி அவர்கள் பட்டதாரி ஆசிரியை நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

Thursday, 29 January 2015

சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல.அது வாழ்க்கைமுறை

                 SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (இரண்டு)


 
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
 29.01.2015வியாழக்கிழமை  இன்றுமாலை 3.00மணிக்கு நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம் -சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு கல்வி நடைபெற்றது.
             திருமதி.R.தங்கமணி அவர்கள், தலைமை ஆசிரியை,(நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம்,சத்தியமங்கலம்).சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவிற்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.






                 திரு.R.மனோகரன் அவர்கள்,உதவி தலைமை ஆசிரியர்,(நகராட்சி உயர்நிலைப் பள்ளி,ரங்க சமுத்திரம்,சத்தியமங்கலம்) அனைவரையும் வரவேற்று துவக்கவுரை நிகழ்த்தினார்.




          திரு.A.A.இராமசாமி அவர்கள்,தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் ..(இடதுபுறம்)



          அரிமா.K.லோகநாதன் அவர்கள்,(லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)முன்னிலை வகித்து விழிப்புரை நிகழ்த்தினார்.
          அப்போது ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் எடுத்து வாகனம் ஓட்ட வேண்டும்.சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.சாலையில் பாதசாரிகளாக நடக்கும்போது வலதுபுறமாகத்தான் நடக்க வேண்டும்.அப்பதுதான் எதிரில் வரும் வாகனங்களைக் கவனமாக பார்த்து நடக்க முடியும்..போக்குவரத்து விதிகளை மற்றும் உத்தரவுச்சின்னங்களை,எச்சரிக்கைச்சின்னங்களை,தகவல் சின்னங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.வாகனங்கள் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் சாலைகள் பற்றிய அடிப்படை அறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும்.வாகனங்களை புகை பரிசோதனை செய்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்.முதலுதவி பயிற்சி எடுக்க வேண்டும்.காப்பீடுகள் அவசியம் தேவை என்றார்....




          திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் சிறப்புரையில்,சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு,ஆதலால் நமது பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.சாலை விதிகளை மதிக்க வேண்டும்.சாலைக்குறியீடுகளை அறிந்துகொள்ள வேண்டும்.போக்குவரத்துசின்னங்களை தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும்.பாதசாரிகளாக,பயணிகளாக,அனைத்து வகை வாகனங்களை ஓட்டுபவர்களாக சாலையில் பாதுகாப்பாக போக்குவரத்து செய்ய வேண்டும்.உடலை காக்க வேண்டும்.அதனால் மனதும் காக்கப்படும்.மனது என்பதன் மறுவடிமாகிய கவனம் சிதறாமல் நமக்கு பாதுகாப்பு கொடுக்கும்.என்றார்.

    (1) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 
   (2) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 
(3) புகைத்தலின் தீங்குகள் பற்றி திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 



       (4) புகைத்தலின் தீங்குகள் பற்றி  திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினார். 

         திரு.R.மனோகரன் அவர்கள் அனைவருக்கும்  நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.
                   (ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் உட்கோட்டம் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் திரு.மா.திருநாவுக்கரசு ஐயா,அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தபோது எதிர்பாராத பணிச்சூழல் காரணமாக கலந்துகொள்ள இயலவில்லை..)