Monday 9 March 2015

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்1986..பயன்கள்

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 
இந்திய தேசிய நுகர்வோர்  குறை தீர்ப்பாணையம்
 (National Consumer Disputes Redressal Commission)
 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986, (Consumer Protection Act, 1986) 
            இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களை களையவும். நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும்இந்திய தேசிய  நுகர்வோர் ஆணையம் இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நுகர்வோரின் இன்னல்களை, துயர்களை துடைக்கும் பொருட்டு மற்றும் அதற்கான வடிவமைக்கப்பெற்ற சட்டத்தை அமல்படுத்தும் ஆணையமாக கடந்த சில ஆண்டுகளில் செயல்பட்டுவருகின்றது. இவ்வாணையம் மக்களின் குறைகளை விரைவில் தீர்க்க அணுகும் ஊர்தியாகவும், மக்களை பாதுகாக்கவும் மற்றும் செலவில்லாத குறை தீர்ப்பாணையமாகவும் மக்கள் அணுகும் விதத்தில் செயல்படுகின்றது.

இச்சட்ட அமலினால் நுகர்வோர் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையுடனும்,   விழிப்புடன் இருக்க தங்களை தீர்மானித்துக் கொள்கின்றனர்.

இச்சட்ட அமலுக்கு முன் வாடிக்கையாளர்கள் விழிப்புடனும் அல்லது வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற நிலையில் நுகர்வோர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.


குறை தீர்வு மன்றம்
இச்சட்டம் வகுத்துள்ள நிபந்தனையின்படி மைய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் ஒன்றை மைய அரசின் நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சர் தலைமையிலும்,  மாநிலத்தில் மாநில நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சரின் தலைமையிலும்  நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொருட்டு மன்றம் அமைத்திடல் வேண்டும். அம்மன்றம் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை களைந்திட அல்லது தீர்வு கண்டிட வேண்டும்.
கட்டமைவு
தேசிய நுகர்வோர் ஆணையம் 1988  ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. இதன் தலைமை பொறுப்பை அமர்வு அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றிருப்பார். தற்பொழுது தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நீதியரசர் அசோக் பான். இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் தலைவராகவும் அவருடன் கூடிய ஒன்பது பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

ஆணையத்தின் ஏற்பாடு
  • இச்சட்டம் வழங்கியுள்ள முன்னேற்பாடுகள் பொருட்கள் அதே நேரத்தில் சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.
  • பொருட்கள் என்பவை எவரொருவர் அல்லது கூட்டு சேர்ந்தோ தயாரிப்பது அல்லது உருவாக்குவது மற்றும் அதனை மொத்த வணிகர் ம்ற்றும் சில்லரை வணிகரின் மூலமாக நுகர்வோருக்கு விற்பது. 
  • சேவைகள் என்பவை போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், கட்டுமானம், வங்கி சார்ந்த (நிதி மனை சார்ந்த-பண இலேவாதேவி), காப்பீடு, மருத்துவ சிகிச்சை இன்னும் பல.,
  • சேவைகளாக பொதுவாக கூறுமிடத்து வாழ்க்கைத் தொழிலர்களான (Professionals) மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், வழக்குரைஞர்கள் இன்னும் பல., இது போன்றவைகளையும் குறிக்கின்றன.
புகார் அளிக்க
புகாரை நுகர்வோர் எழுத்துமூலமாக ஆணையத்திற்கு நேரிடையாகவோ அல்லது நுகர்வோரின் அதிகாரம் பெற்றவர் எவரும் அளிக்கலாம். அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை.  வழக்குகளையும் (புகார் தாரர்) நுகர்வோரே வழக்காடலாம் அல்லது அதிகாரம் பெற்ற எந்தவோரு நபரும் வழக்காடலாம். மனுதாரருக்கு (நுகர்வோருக்கு) துணை நிற்பவர் (உடன் உறைபவர்) எவரும் இலர் என்பதையுணர்ந்து, அப்புகாரின் நேர்மையைக் கருதி ஆணையமே வழக்குப் பிரதிநிதிகளை நியமிக்கின்றது . இம்முறை மேல்முறையீட்டிலும் பின்பற்றுகின்றது.

புகார் ஏற்கும் முறை
மாவட்ட ஆயம்                              ரூபாய் இருபது இலட்சம் வரை
மாநில ஆணையம்                      ரூபாய் ஒரு கோடி வரை
தேசிய ஆணையம்                      ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளவைகள்
குறிப்பு இதனுள் அடங்கிய பொருள்களின்  மற்றும் சேவைகளின்  மதிப்புகளை அந்த குறிப்பிட்ட பொருள் சேவை இவைகளின் விலை மதிப்பை குறிப்பதாகும். இதன் பொருளை இலவச சேவைகளுக்கோ, ஒப்பந்த அடிப்படையில் சுய தேவைகளுக்காக ஏற்படுத்துகின்ற பொருளின் மதிப்பைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தை ஒரு சுட்டிக்காட்டுபவையாக  எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாம் அதனுள் அடங்கியதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.

கட்டணம் கிடையாது
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் மலிவான மாற்று இன்னல் நீக்கும் வழியாக நுகர்வோருக்கு ஏற்கனவே ஏற்பட்ட இன்னல்களை நீக்குவனவாக உரிமையியல் தீர்வின் மூலம் அவர் துயர்களை துடைக்கின்றது. புகார் / மேல் முறையீடு / மனு தாக்கல் செய்வதற்காக இச்சட்டம் வகுத்துள்ளபடி அவர்களிடம் (நுகர்வோரிடம்) எந்தவித கட்டணமோ, செயல் கட்டணமோ வசூலிப்பது கிடையாது.


காலவிரயமின்றி
இதன் சட்டமுறைமைகள், எளிமையானதாகவும், சுருக்கமானதாகவும் இருப்பதாலும், இதன் பெருமுயற்சி தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இதன் வழக்குகள் வெகு விரைவில் தீர்வு காணப்படுகின்றன, வெகு விரவில் முடிக்கப்படுகின்றன.

மேல்முறையீடு
நுகர்வோருக்கு மாவட்ட ஆயத்தின் தீர்வு திருப்தியளிக்கவில்லையென்றால் மேல்முறையீட்டுக்கு மாநில ஆணையத்தை அணுகலாம் அதிலும் திருப்தியளிக்கவில்லையென்றால் தேசிய ஆணையத்தை அணுகலாம்.

தேசிய ஆணையம் அமைந்துள்ள இடம்
தேசிய ஆணையத்தின் பதிவு அலுவலகாமக புது தில்லி, ஜன்பத், உள்ள ஜன்பத் பவனில் பி பிரிவு (பி விங்) 7 வது தளத்தில்  அமைந்துள்ளது. ஆணையம் சனி, ஞாயிறு மற்றும் மைய அரசு விடுமுறை நாட்களைத் தவிர, அனைத்து நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இயங்கும். ஆணையத்தை தொலைபேசி மூலம் அணுகுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 011-23712109, 23712459, 23389248. தொலை நகல் 23712456.  ஆணையங்கள் நுகர்வோரின் நண்பனாக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய ஆணையங்கள் செயல்படுகின்றன.
தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய இணையதளம்
 நூல் ஆதாராம் Consumer Protection Act, 1986-K.S,Mahalingam. மற்றும் நூகர்வோர் தமிழ் சட்ட நூல்கள், மத்திய அரசு இணையதளம்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (The Consumer Protection Act, 1986 ) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004  முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.
முக்கிய கூறுகள்
  • இச்சட்டம் மைய அரசால்  விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைத் தவிர ஏனைய எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
  • அனைத்துறையின் எதுவாயினும், தனியார் மற்றும் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது தனி நபர் இவை யாவரையும் கட்டுப் படுத்தும். இச்சட்டம் வகுத்துள்ளதின்படி இவர்கள் நட்டஈடு வழங்க அதே சமயத்தில் தடை செய்யவோ,தண்டணை  வழங்கவோ வழி செய்கின்றது.
  • நுகர்வோரை போற்றிப் பேணுகின்ற உரிமைகளாவன;-
(1) உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. (2) பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், எடை, வீரியம், கலப்படமற்ற, தரநிர்ணயம் மற்றும் விலை அறிந்து கொள்ளவும், நேர்மையற்ற வணிகத்தினரிடமிருந்து நுகர்வோர் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை. (3) மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத்தன்மையை நுகரவோருக்கு உறுதிபடுத்துதல் உரிமை. (4) மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிகத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை (5) நேர்மையற்றை வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தை நாடுதல் உரிமை.

“நுகர்வோரே அரசர்” என்பது சரியானதா???

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இந்தப்பதிவில் நுகர்வோருக்கான நீதி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
நுகர்வோர் நீதி-ஒரு கண்ணோட்டம்
ச. ஞானதேசிகன்
மார்ச் 15, உலக நுகர்வோர் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் நாளில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
“நுகர்வோரே அரசர்” என்ற நிலை இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழலில் நிலவினாலும் அது பெயரளவிற்கே பொருந்துகிறது. நிஜவாழ்க்கையில், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களினால் ஏமாற்றப்படும் அவல நிலையில்தான் நுகர்வோர்கள் உள்ளனர்.
பணம் செலுத்தி சொந்த உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் அல்லது பயன்பெறும் சேவையில் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.
இன்றைய நுகர்வோர்கள், பொருளின் தரம், எடைகுறைவு, அதிக விலை, விளம்பரம், போலிப் பொருள்கள், ஏகபோக வணிகத்தின் மூலம் ஏமாற்றப்படும் சூழ்நிலை நிலவுகிறது. உத்தேச மதிப்பீட்டின்படி இந்திய நுகர்வோர்கள் ஆண்டுதோறும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஏமாற்றப்படுகின்றனர்.
நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வில் நமது நாட்டினர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எழுத்தறிவின்மை, ஏழ்மை, வாங்கும் சக்தி குறைவு, அலட்சியம், அக்கறையின்மை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.
நுகர்வோர் உரிமைகள்: 1962, மார்ச் 15ம் நாள் மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் பிரகடனப்படுத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகள் யாதெனில் பாதுகாப்புரிமை, தெரிவு செய்யும் உரிமை, தகவல் பெறும் உரிமை மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் உரிமை.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் செயல்படும் பன்னாட்டு நுகர்வோர் அமைப்பு மேலும் மூன்று உரிமைகளை வலியுறுத்தியுள்ளது. அவைகள் இழப்பீடு பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் உரிமை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986: நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நுகர்வோர் சம்பந்தப்பட்ட பல சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றியபோதிலும், நுகர்வோருக்குக்கென்று அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், நலன் பேணவும் 1986-ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இச் சட்டம் அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைப்புகளுக்குப் பொருந்தும். இலவசப் பொருள்கள் மற்றும் இலவச சேவைகள் இச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் கலாசாரம் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் நுகர்வோரின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை.
நுகர்வோர் நீதிமன்றங்கள்: இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன்படி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதி வழங்க மூன்றடுக்கு கொண்ட குறை தீர்க்கும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் நிலையில் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில் செயல்படுகிறது. ரூ. 25 லட்சத்திற்குக் குறைவாக நஷ்ட ஈடு கோரும் நுகர்வோர் இம் மன்றத்தை அணுகலாம்.
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 570 மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சம் நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2 லட்சம் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர பெரும்பான்மையான நுகர்வோர் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் 88 சதவீதம்.
சிக்கிம் மாநிலத்தில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள், நுகர்வோர் குறை தீர்ப்பதில் நாட்டிலே முதலிடம் வகிக்கின்றன. தீர்வு விகிதம் 98 சதவீதம். நுகர்வோர் நீதி பெறுவதில் பிகார் மாநில மக்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். தீர்வு விகிதம் 76 சதவீதம்.
ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்கும் குறைவாக இழப்பீடு கோரும் நுகர்வோர், மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்தை அணுகலாம். நாட்டில் தற்போது 34 மாநில நுகர்வோர் நீதிமன்றங்கள் மாநிலத் தலைநகரங்களில் இயங்கி வருகின்றன. இவ்வாணையங்களில் 3,59,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 2,41,231 வழக்குகளில் நுகர்வோருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. மாநில நுகர்வோர் தீர்ப்பாணையத்தின் தீர்ப்பு 67 சதவீதம்.
நுகர்வோருக்கு நீதி வழங்குவதில் நாட்டிலே சண்டீகர் மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் முதலிடம் வகிக்கிறது. தீர்ப்பு விகிதம் 97 சதவீதம். அதேவேளையில் மிகக்குறைந்த அளவில் உத்தரப் பிரதேச மாநில நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் புதுதில்லியில் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நுகர்வோர், ரூ.1 கோடிக்கு மேல் இழப்பீடு கோரினால் தேசிய ஆணையத்தை அணுகலாம். சுமார் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 27 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்வு விகிதம் தேசிய அளவில் 78 சதவீதம்.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் அவர் சார்ந்த மாவட்ட, மாநில நுகர்வோர் தீர்ப்பாணையங்களை அணுகி இழப்பீடு கோரலாம். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஒரு ரூபாய் கூட நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்த வேண்டியதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோருக்கு 90 முதல் 150 நாள்களுக்குள் நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் நீதி பெறுவதில் காலதாமதம் ஆகிறது. தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். தாமதமாக நுகர்வோர் நீதி வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் நிலவுகின்றன.
முதலாவதாக, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் “”வாய்தா” கேட்பதின் மூலம் நுகர்வோர் வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியப்போக்கு, அக்கறையின்மை இதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. பெரும்பாலான நுகர்வோர் தீர்ப்பாணையங்கள் சொந்தக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல!
மேலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாததால் நுகர்வோர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் ஆணையை நிறைவேற்றாமல் செயல்படும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணமாக நுகர்வோருக்குக் கிடைக்கக்கூடிய நீதி மேலும் தாமதமாகிறது.
மேற்கூறிய குறைகளைத் தவிர்க்க கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நுகர்வோர் நலனைப் பேணலாம்.
வழக்கறிஞர்கள் அதிக அளவில் “வாய்தா’ வாங்குவதைத் தவிர்க்க வழிவகை செய்யவேண்டும். தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து, முன்கூட்டியே நியமிப்பதன் மூலம் வழக்குகள் தொய்வில்லாமல் நீதி வழங்க வகை செய்ய வேண்டும். நுகர்வோர் நீதிமன்ற உள்கட்டமைப்பு வசதிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தாராள நிதி வழங்க வேண்டும். நிதி வழங்குவதிலும், நீதி வழங்குவதிலும் காலதாமதம் கூடாது. நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை விற்பனையாளர்கள், சேவை நிறுவனங்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமுறைப்படி கிடைக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
நுகர்வோர் தாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சேவையில் உள்ள குறைகளைத் தீர்க்க நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதுபோல், நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் தார்மிகக் கடமையாகும்.
“”நலம் சார்ந்த அரசு” நுகர்வோர் நலன் பேணட்டும் என்று இன்றைய தினத்தில் சூளுரைப்போம்.
(கட்டுரையாளர்: வணிகவியல்துறைத் தலைவர், டாக்டர் என்.ஜீ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்).

வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக சேமிப்போம்.நமது பொறுப்புகளையும் தெரிந்துகொள்வோம்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக சேமிப்போம்.நமது பொறுப்புகளையும் தெரிந்துகொள்வோம்.
 வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு…
( பதிவிட்ட திரு. இரா. எத்திராஜன் அவர்களுக்கு நன்றிங்க....)
              (1)*அனைத்து வங்கிகளும் கணினி முறையில் இயங்குவதால் காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது, காசோலையில் கண்டிப்பாக ஸ்டேப்லர் பின் போடக்கூடாது. அதற்குப் பதிலாக, காசோலையை, வங்கிப் படிவத்துடன் இணைத்து குண்டூசி போடலாம்.

           (2)*காசோலையை மற்றவர்களுக்கு வழங்க நேரிடும்போது, காசோலையில், நிறுவனம் அல்லது பெறுபவரின் பெயர், பணத்தின் மதிப்பை எண் மற்றும் எழுத்தாலும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
           (3)*ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவது குற்றமாக ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் தங்களின் சொந்தக் குறிப்புகளை எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
          (4)*வங்கி பாஸ் புத்தகத் தகவல்களை நாள்தோறும் சரிபார்க்க கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.
             (5)*வங்கி பாஸ் புத்தகத்தை மடக்கி வைத்தல் கூடாது. ஏனெனில் பாஸ் புத்தகத் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நேரிடும்போது, மடக்கப்பட்ட புத்தகம் கம்ப்யூட்டரில் நுழைவது கடினமாக இருக்கும்.
          (6)*வங்கி வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நாளேடுகளில் வங்கிகளைப் பற்றி வெளிவரும் செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கித் துறையில் ஏற்படும் புதிய மாற்றங்களை வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.
            (7)*வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
               (8)*வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடங்கள் மாற்றத்தின்போது, கண்டிப்பாக கடிதம் மூலம் வங்கி கிளைக்குத் தெரிவிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.

எது வங்கியின் சேவைக் குறைபாடு?

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். வங்கி குறைபாடுகள் எவை? எவை? என அறிவோம்.
      1. வங்கி அதிகாரிகள் தரக்குறைவாகவோ, அவமானப்படுத்தும் விதமாகவோ நடந்துகொண்டாலோ ,
2. ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டாலோ,
3. குறிப்பிட்ட வட்டி விகிதத்தை விடக் கூடுதலாக வாங்கினாலோ,
4. நியாயமான ஒரு குறைபாடு குறித்து நிவர்த்தி செய்ய வழிமுறை கேட்டவர் மீதே குற்றம் சுமத்தினாலோ,
5. போதிய நியாயமான காரணமின்றி உரிய நேரத்திற்குள் செக் கலெக்‌ஷன் ஆகாமல் இருந்தாலோ,
6. குறிப்பிட்ட நபருக்கோ, நிறுவனத்திற்கோ வங்கிக் கணக்கிலிருந்து தனது பணம் செல்லக் கூடாது என்று கடிதம் கொடுத்தும் வங்கி, பணம் கொடுத்திருந்தாலோ (யாருக்காவது செக் கொடுத்திருந்து பின்னர் பிரச்சினையாகிவிட்டால் அவருக்கு நாம் கொடுத்த செக் மூலம் பணம் சென்றுவிடும்),
7. காரணமின்றி அலைக்கழித்தாலோ அதெல்லாம் வங்கியின் சேவைக் குறைபாட்டின் கீழ் வரக் கூடியதே.

நமக்கு தெரிவிக்காமல் நமது வங்கி கணக்கை முடிக்க முடியாது..

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். நம்மிடம் தெரிவிக்காமல் நம்முடைய வங்கி கணக்கை முடிக்க முடியாது..இதோ ஒரு உதாரணம்.
 

வாடிக்கையாளருக்கு முன்கூட்டி தகவல் அளிக்காமல், வங்கிக் கணக்கை          முடிக்க முடியாது என்று டெல்லி நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானரில் கணக்கு வைத்திருக்கும் டெல்லி, கரோல்பாக் பகுதியைச் சேர்ந்த பிரபாகரின் வங்கிக் கணக்கில் சமீபத்தில் இரண்டு காசோலைகளை பரிமாற்றம் செய்த வங்கி, மூன்றாவது காசோலையை காரணம் கூறாமல் நிராகரித்தது. கேட்டதற்கு, ‘கே.ஒய்.சி. எனப்படும் அடையாள ஆவணங்கள் தரவில்லை’ என்று கூறி, வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
‘எனக்கு தகவல் தெரிவிக்காமல் இப்படி செய்தது முறையல்ல. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளானேன்’ என்று கூறி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார் பிரபாகர். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர்மன்றம், ‘வாடிக்கையாளருக்கு தகவல் தராமல் கணக்கை வங்கி தன்னிச்சையாக முடிக்க முடியாது. கே.ஒய்.சி. விதிமுறைகளை வாடிக்கையாளர் அளிக்க வேண்டியதை முன்கூட்டி தெரிவித்திருக்க வேண்டும். இது சேவைக் குறைபாடு. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது கணக்கைத் தொடரவும் வங்கிக்கு உத்தரவிடுகிறோம்’ என்று தீர்ப்பளித்தது.

பணம் என்றால் என்ன?கள்ளநோட்டு என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பணம் என்றால் என்ன?நாணயம் என்றால் என்ன?கள்ளநோட்டு அதாவது கள்ளரூபாய் என்றால் என்ன? என பணம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளுங்க...பதிவிட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இணையதளத்திற்கு நன்றிங்க...
 
பண விபரங்கள்
 
பணம் பற்றிய செய்திகளுக்கு உங்கள் வழிகாட்டி
 
            செலுத்துதல்/செலுத்துவதற்குரிய ஒரு வழியாகிய பணம் இருக்கிறது.  நாணயங்கள், பணத்தாள், திரும்பப் பெறத்தக்க வங்கி வைப்புத் தொகைகள் ஆகியன பணத்தில் அடங்கும். இன்று கடன் அட்டைகள், மின்னணுப்பணம் ஆகியன தொகை செலுத்தும் முறையின் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளன. இருப்பினும் ஒரு சாதாரண மனிதனுக்குப் ணம் என்பது பணத்தாளும், நாணயங்களும்தான். ஏனெனில் இந்தியாவில் தொகை செலுத்தும் முறை, குறிப்பாக சில்லறைப் பரிமாற்றங்கள் இன்னமும் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது. எப்படி இருப்பினும் ஒரு சாதாரண மனிதன், தான் நாள்தோறும் கையாளும் பணத்தாள், நாணயம் ஆகியன பற்றி மிகச் சிறிதே அறிந்துள்ளான்.
 இந்திய நாணயம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்குப் பதிலளிக்கும் முயற்சி இது.
 
சில அடிப்படைகள்
 
(1)இந்திய நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 இந்திய நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. நாணயங்கள் பைசா என அழைக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் 100 பைசாக்கள் கொண்டது.
 
(2)இன்றைய இந்திய பணத்தாள்களின் இலக்க மதிப்புகள் யாவை?
 இன்று இந்தியாவில் ரூ.5, 10, 20, 50, 100, 500, 1000 ஆகிய இலக்க மதிப்புகளில் வெளியிடப்டுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியினால் (ரிசர்வ் வங்கி) வெளியிடப்படுவதால் இவை வங்கித்தாள்கள் எனப்டும். ரூ.1, ரூ.2 ஆகியவை நாணயமாக வெளியிடப்படுவதால், இந்த மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் முன்னர் வெளியிடப்பட்ட பணத்தாள்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ரூ.5 மதிப்பிலான பணத்தாள்கள் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்து. ரூ5/- மதிப்பிலான நாணயங்களின் தேவைக்கும் அளிப்புக்கும் இடையேயுள்ள இடைவெளியினை நீக்குவதற்காக இவற்றில் மீண்டும் பணத்தாள்கள் அறிமுகப்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
(3)இந்தியாவில் தற்போதுள்ள நாணயங்களின் இலக்க மதிப்புகள் எவை?
இந்தியாவில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் ஆகிய இலக்க மதிப்பிலான நாணயங்கள் உள்ளன. 50 பைசா வரை உள்ள நாணயங்கள் சிறு நாணயங்கள் எனவும், ரூபாய் ஒன்றும், அதற்கு மேலும் மதிப்புள்ள நாணயங்கள் ரூபாய் நாணயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
(4)வங்கித் தாள்களும் நாணயங்களும் இந்த இலக்க மதிப்புகளில் மட்டும்தான் வெளியிடப்பட முடியுமா?
 தேவை இல்லை. மத்திய அரசின் அறிவுரைப்படி இந்திய ரிசர்வ் வங்கி ஓராயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய், அல்லது எந்த இலக்க மதிப்பிலும் வெளியிட இயலும். இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் இப்போதைய விதிகளின்படி பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட இலக்க மதிப்புகளில் பணத்தாள்கள் இருக்க முடியாது. நாணயங்களை ரூ.1000 இலக்க மதிப்புவரை வெளியிடமுடியும்.
 
பண நிர்வாகம்
 
(5)பண நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
 ரிசர்வ் வங்கி இந்தியாவில் பண நிர்வாகம் செய்கிறது. அரசு ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு இலக்க மதிப்புகளை முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி, வங்கி நோட்டுகளை வடிவமைப்பதில் (பாதுகாப்புத் தன்மைகள் உட்பட) அரசுடன் சேர்ந்து பணிசெய்கிறது. இலக் மதிப்பு வாரியாக தேவைப்படும் பணத்தாள்களின் அளவினை ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு இந்திய அரசின் மூலம் பல்வேறு அச்சகங்களுக்கு தனது தேவைப்பட்டியலை அளிக்கிறது. அச்சகங்களிலிருந்து பெறப்படும் பணத்தாள்கள் வெளியிடப்படுவதுடன் இருப்பும் வைத்திருக்கப்படுகிறது. வங்கிகளிலிருந்தும் பணவறையிலிருந்தும் பெறப்படும் பணத்தாள்கள் பரிசோதிக்கப் படுகின்றன. புழக்கத்துக்குத் தகுதியானவை திரும்பவும் வழங்கப் படுகின்றன. புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மற்றவை (அழுக்காடைந்தவையும், சேதமடைந்தவையும்) அழிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி பண நிர்வாகப் ணியைப் பெறுகிறது.
 
(6)இந்திய அரசின் பங்கு  என்ன?
 நாணயச் சட்டம் 1906 இன்படி காலத்துக்குக் காலம் அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் அடிப்படையில் நாணய உருவாக்கம் இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணய வடிவமைப்பினையும் பல்வேறு இலக்க மதிப்புகளில் நாணயங்களை அடித்தலையும் இந்திய அரசு மேற்கொள்கிறது.
 
(7)எவ்வளவு வங்கி நோட்டுகள், அச்சிடப்பட வேண்டும், மற்றும் எவ்வளவு மதிப்பிற்கு என்பதை முடிவு செய்பவர் யார்? எந்த அடிப்படையில்?  
இந்திய ரிசர்வ் வங்கி, எவ்வளவு மொத்த வங்கி நோட்டுகள் மற்றும் எவ்வளவு மதிப்புற்கு என்பதை முடிவு செய்கிறது. எவ்வளவு அச்சிடப்பட வேண்டும் என்பது பெரும்பாலும் புழக்கத்திற்குத் தேவையான வங்கித்தாள்களுக்காக குறிப்பிடப்படும் வருடாந்திர அதிகரிப்பு, அழுக்கடைந்த நோட்டுகளை அகற்றுதல், இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப்  பொருத்து முடிவு செய்யப்படுகிறது.
 
(8)எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்பவர் யார்?
 இந்திய அரசு எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
 
(9)வங்கி நோட்டுகளின் தேவையை ரிசர்வ் வங்கி எவ்வாறு முடிவு செய்கிறது?
 பொருளாதார வளர்ச்சி விகிதம், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத் தேவைகள் ஆகியவற்றைப் புள்ளியியல் முறைகளில் கணக்கிட்டு மதிப்பீடு செய்கிறது.
 
(10)ரிசர்வ் வங்கி நாணயம் / பணத்தாள்களை எவ்வாறு மக்களிடம் சென்றடையச் செய்கிறது?  
ரிசர்வ் வங்கி அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேசுவர், பேலாபூர் (நவிமும்பை), கோல்கத்தா, சண்டிகார், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை (கோட்டை), நாக்பூர், புதுடில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனது அலுவலகங்களின் மூலம் ணச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அலுவலகங்கள் பணத்தாள்களை அச்சிடும் அச்சகங்களிலிருந்து புதுத்தாள்களை நேரடியாகப் பெறுகின்றன. அதைப்போன்றே கோல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் நாணயக் கூடங்களிலிருந்து நாணயங்களைப் பெறுகின்றன. இந்த அலுவலகங்கள் அவற்றை மற்ற ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன. பணத்தாள்களும் ரூபாய் நாணயங்களும் பணவறையிலும், சிறு நாணயங்கள் சிறு நாணயக்கூடத்திலும் இருப்பு வைக்கப்படுகின்றன. வங்கியின் கிளைகள் பணவறையிலிருந்தும், சிறுநாணயக்கூடத்தில்  இருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெற்று பொது மக்களுக்கு வழங்குகின்றன.
 
(11) பணவறை என்பது என்ன?
 பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்குவதற்கு ஏற்ற வகையில் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு பணவறைகளை நிறுவ அதிகாரம் அளித்துள்ளது. இவை உண்மையில் ரிசர்வ் வங்கிக்காக பணத்தாள்களையும் நாணயங்களையும் சேர்த்து வைக்கும் பண்டக சாலை ஆகும். தற்போது 4368 பணவறைகள் உள்ளன. பணவறை வங்கிகள் தங்கள் செயலாக்கப் பகுதியிலுள்ள மற்ற வங்கிகளுக்கு பணத்தாள்களையும் நாணயங்களையும் வழங்கவேண்டும்.
 
(12) சிறு மதிப்பு நாணயக்கூடம்  என்பது என்ன?
 சில கிளை வங்கிகள் சிறுநாணயங்களைச் சேமித்து வைத்துக் கொளவ்தற்காக சிறுமதிப்பு நாணயக்கூடங்களை அமைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலும் 3708 சிறுமதிப்பு நாணயக் கூடங்கள் உள்ளன. சிறுமதிப்பு நாணயக்கூடங்கள் தங்கள் செயலாக்க எல்லையில் உள்ள மற்ற  வங்கிக் கிளைளுக்கு நாணயங்களை வழங்குகின்றன.
 
(13) பணத்தாள்களும், நாணயங்களும் புழக்கத்துக்குப் பின் திரும்ப வரும்போது என்ன நிகழ்கிறது?  
புழக்கத்திலிருந்து திரும்ப வரும் பணத்தாள்களும் நாணயங்களும் ரிசர்வ் வங்கியின் அலுவலங்களில் செலுத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி பிறகு அவற்றை, திரும்பவும் வழங்குவதற்கு ஏற்றது என்றும், ஏற்றத்தகாதது என்றும் பிரிக்கிறது. வழங்குவதற்குத் தகுதியல்லாதவை சிறுசிறு துகள்களாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. திரும்பப் பெறப்பட்ட நாணயங்கள் உருக்கப்படுவதற்காக நாணயக்கூடங்கள் அனுப்பப் படுகின்றன.
 
(14) பொதுமக்கள் பணத்தாள்களையும் நாணயங்களையும் எங்கிருந்து பெறலாம்?
 ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்திலிருந்தும், மற்றும் பணவறையையும் சிறுமதிப்பு நாணயக்கூடமும் கொண்டுள்ள, எந்த வங்கிக்கிளைகளிலிருந்தும் பணத்தாள்களையும் நாணயங்களையும் பெறலாம்.
 
இன்றைய நிகழ்வுகள்
 
(15) பணத்தாள்களும் நாணயங்களும் ஏன் பற்றாக்குறையாக உள்ளன?
 இது முழுவதும் சரி அன்று. சமீப நாட்கள் வரை பணத்தாள்களின் அளிப்பு தேவைக்குக் குறைவாகவே இருந்தது உண்மையே. இதற்குரிய முதன்மையான காரணம் இந்தியச் சமுதாயம் இன்னமும் ரொக்கப் பணம் காசையே முதன்மையாகக் கொண்டுள்ளது. இருந்தாலும், இப்போது பணத்தாள்களைப் பொறுத்தவரை அளிப்பில் சிக்கல் ஏதும் இல்லை. நாணயங்களைப் பொறுத்தவரை இந்திய அரசு நாணயங்களை இறக்குமதி செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாணயங்கள் தேவைக்கேற்ப அளிப்பு குறைவு என்னும் தோற்றம், மக்களின் பணத்தாள்களுக்கு முதன்மை கொடுக்கும் மனப்பாங்கினாலும் அதிகரிக்கப்படுகிறது.
 
 (16) பணத்தாள்களையே நம்பியிருப்பதைக் குறைக்க வழி உண்டா?
 உண்டு. காசேலைகள், கடன் அட்டை, பற்று அட்டை, மின்னணு நிதிப் பரிமாற்றம் ஆகியன பெரிதும் பழக்கத்துக்கு வந்தால் பணத்தாள்களுக்கு உரிய தேவை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
 
(17) இந்த நிலையில் பணத்தாள்கள் நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
 ஆம். பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றின் அளிப்பினை அதிகரிக் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவற்றுள் சில:
1)       இப்போதுள்ள அரசுக்குச் சொந்தமான அச்சகங்களும், நாணயக்கூடங்களும் புதுமைப்படுத்தப்படுகின்றன.
2)      ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமையுடைய துணை நிறுவனமாகிய இந்திய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் லிமிட்டெட்டின் கீழ் இரண்டு அதி நவீன வசதிகளைக் கொண்ட அச்சகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3)      தேவை - அளிப்பு இடைவெளியை இணைக்க அரசு ஒருமுறை நடவடிக்கையாக இறக்குமதி கூட செய்தது.
4)      இந்திய அரசின் நான்கு நாணயக்கூடங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்ப்பட்டுள்ளது.
5)      நான்கு நாணயக்கூடங்களின் அளிப்புக்குக் கூடுதலாக இந்திய அரசு ரூபாய் நாணயங்களை இறக்குமதியும் செய்து வருகிறது. இன்று வரை 2 பில்லியன் ரூபாய் நாணயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
 
 (18) ரூ.1, ரூ.2, ரூ.5 பணத்தாள்கள் ஏன் அச்சிடப்படுவதில்லை?
 அளவினைப் பொருத்வரை புழக்கத்திலுள்ள மொத்த பணத்தாள்களில் இந்த சிற்றிலக்க மதிப்புப் பணத்தாள்கள் 57 விழுக்காடு. ஆனால் மதிப்பினைப் பொருத்தவரை இது 7 விழுக்காடு மட்டுமே. இந்தத் தாள்களின் சராசரி வாழ்நாள் ஒரு ஆண்டுக்குள்ளே தான். எனவே இவற்றை அச்சிடுதல் மற்றும சேவை அளித்தலுக்காக ஏற்படும் செலவு அவற்றின் வாழ்நாளுடன் பொருந்தவில்லை. எனவே இந்த இலக்க மதிப்புகள் நாணயங்களாக்கப்பட்டன. இந்த இலக்க மதிப்புகளில் உள்ள தேவை அளிப்பு இடைவெளியினைக் குறைக்க, மீண்டும் ரூ.5 இலக்க மதிப்பில் பணத்தாள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள்
 
 (19) அழுக்கடைந்த, சேதமடைந்த பணத்தாள்கள் என்பவை யாவை?
 அழுக்கடைந்த பணத்தாள்கள் என்பன அதிகப்பயன்பாட்டினால் மக்கியும், மடங்கியும் போன பணத்தாள்கள் ஆகும். சேதமடைந்த தாள்கள் என்பன கிழிந்த, வடிவம் மாறியவை, எரிந்தவை, அழுக்கு நீக்க முயன்று சேதப்பட்டவை, செல்லரிக்கப்பட்டவை போன்றன. இரண்டு துண்டாக்கப்பட்ட, இருபகுதிகளிலும் எண்களைக் கொண்ட, ஆனால் இரண்டுமே ஒரே எண்ணாக இருக்கும் நிலையில் உள்ள பணத்தாள் இன்று அழுக்கடைந்த பணத்தாளாகக் கருதப்படுகிறது.
 
(20 )அத்தகைய பணத்தாள்கள் உரிய மதிப்புக்கு மாற்ற இயலுமா?
 ஆம். அழுக்கடைந்த பணத்தாள்கள் எல்லா வங்கிக் கிளைகளிலும் பெறப்படுதற்கும் மாற்றப்படுவதற்கும் உரியன.
 
 (21) அழுக்கடைந்த அல்லது சேதமடைந்த பணத்தாள்களை எவ்வளவு மதிப்புக்கு மாற்றிக்கொள்ள முடியும்?
 அழுக்கடைந்த பணத்தாள்களுக்கு உரிய முழு மதிப்புத் தொகையினைப் ஒருவர் பெற முடியும். சேதமடைந்த பணத்தாள்களுக்கு உரிய மாற்று மதிப்பு இந்திய ரிசர்வ் வங்கி விதிகள், 1975 (பணத்தாள் மதிப்பு திரும்பப்பெறல்) இன்படி வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 28 இன் கீழ் இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விதிகளில் கூறியபடி மதிப்பீட்டுக்குப் பின், பொதுமக்கள் இத்தகைய பணத்தாள்களுக்கு உரிய மதிப்பினைப் பெற முடியும். ரூ. 10க்கும் அதற்கு மேலும் இலக்க மதிப்பு கொண்ட கிழிந்த/சேதமடைந்த  பணத்தாள்களுக்கு மாற்று மதிப்பு முழு மதிப்பு, அரைமதிப்பு, ஒன்றுமில்லை ஆகிய நிலைகளில் இப்போது விதிகள் உள்ளன. ரூ.1, ரூ.2, ரூ.5 பணத்தாள்களைப் பொருத்தவரை அத்தாள்களின் நிலையின் அடிப்படையில் முழு மதிப்போ அல்லது பணம் பெறாமை என்ற நிலையில் தான் விதிகள் உள்ளன.
 
(22) பணத்தாள்கள் மதிப்பு திரும்பப்பெறல் விதிகளின்படி எந்த வகையான பணத்தாள்கள் தொகையைத் திரும்பப் பெற இயலாது?
 பின்வரும் பணத்தாள்கள் திரும்பப்பெறும் விதிகளின்கீழ் மாற்றுத்தொகையைப் பெறுவதற்கு உரியவை அல்ல.
1.        முழு பணத்தாளின் பாதிப்பரப்புக்  குறைவாக உள்வை,
2.       வரிசை எண்ணின் பெரும்பகுதி இல்லாதவை, அதாவது வரிசை எண்ணிற்கு முன்னெழுத்தும் மூன்று எண்களும் அல்லது நான்கு எண்களும் இல்லாத ரூ.5ம் அதற்குட்பட்ட இலக்க மதிப்புள்ள நோட்டுகள்,  ரூ.10ம் அதற்கு மேலும் உள்ள பணத்தாள்களில் இந்தக் குறைபாடு, வரிசை எண்கள் இருக்கும் இரண்டு இடங்களிலும் இருக்குமானால்,
3.       ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தினாலாவது அந்தத்தாள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டிருந்தால் அல்லது முன்னமே தொகை திரும்பச் செலுத்தப்பட்டிருந்தால்.
4.       கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டால்.
5.       வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டிருந்தால், சேதப்டுத்தப் பட்டிருந்தால், திருத்தப்பட்டிருந்தால்,
6.       தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தால், அரசியல் பண்புடைய செய்திகளைத் தரக்கூடிய அல்லது தருகின்ற நோக்கமுடைய வார்த்தைகள்/ படங்கள் கொண்டிருந்தால்
 
(23)ஒரு பணத்தாள் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு உரியது அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்யப்படும்?
 பணம் திரும்பப் பெறுவதற்கு உரியதல்லாத தாள்களை, அவற்றைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் அவற்றை வைத்துக்கொண்டு பின்னர் அழிக்கப்படுவதற்காக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்கின்றன.
 
 (24)அழுக்கடைந்த/சேதமடைந்த பணத்தாள்கள் எங்கே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன?
 எல்லா வங்கிகளுக்கும் தங்கள் கொடுக்கல் வாங்கல் முகப்புகளில் அழுக்கடைந்த தாள்களைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய மாற்று மதிப்பினைச் செலுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த/கிழிந்த நோட்டுகளை பணவறைகள் கொண்ட கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம்
 
தற்கால பணத்தாள்களின் தோற்றங்கள்
 
 (25)இப்போது புழக்கத்தில் உள்ள பணத்தாள்களின் பொது அம்சங்கள் எவை?
 ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய முன்னர் வெளியிடப்பட்டு இப்போதும் புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள், அசோகா தூண் நீர்க்குறியீட்டையும் அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டுள்ளன. முன்னர் வெளியிடப்பட்ட ரூ.500 பணத்தாள்கள் அதாவது 1987முதல், அசோகா தூண் நீர்க் குறியையும் மகாத்மா காந்தி உருவப்படத்தையும் கொண்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது மகாத்மா காந்தி வரிசையில் பணத்தாள்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறது. அவை  மகாத்மா காந்தியின்  உருவப் படத்தையும் நீர்க்குறியீட்டையும் கொண்டிருக்கும். ஆகஸ்டு 2001  இல் திரும்பவும் வெளியிடப்பட்ட ரூ.5 பணத்தாள்கள் அசோகா தூண் நீர்க் குறியீட்டையும், அசோகா தூண் உருவப்படத்தையும் கொண்டிருந்தது. வங்கியால் வெளியிடப்படும் இந்த தாள்கள் யாவும் மறுக்க இயலாத செலாவணிப் பணங்கள் ஆகும்.
 
 (26)அந்த மாற்றம் ஏன் கொண்டுவரப்பட்டது?
 உலகெங்கிலும் உள் மத்திய வங்கிகள் தங்கள் பணத்தாள்களின் வடிவத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இதற்குரிய முதன்மையான காரணம் கள்ள நோட்டுகள் உருவாவதைக் கடினமாக்குவதுதான். இந்தியாவும் இதே கொள்கையைப் பின்பற்றுகிறது.
 
 (27) மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்களில் ஏதேனும் சிறப்பு அமசங்கள் உள்ளனவா?
புதிய மகாத்மா காந்தி வரிசை பணத்தாள்கள், பழைய தாள்களுடன், ஒப்பிடும்போது பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. அவை:
  1.  பாதுகாப்பு ழை: ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு ழையைக் கொண்டுள்ளது. இந்த ழை பாதி வெளியில் தெரிவதாகவும் பாதி உள்ளே பதிக்கப் பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும் போது இந்த ழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த ழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும் ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றமளிக்கும். ரூ.1000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் 1000, ‘RBI’ என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு ழைகளைக் கொண்டிருந்தன.
  2.  மறைந்திருக்கும் மதிப்பெண்: மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20,50,100,500,1000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லையேல் இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும்.
  3. நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்ககுத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருப்பெருக்கக் கண்ணாடியின் வழியே இதனைத் தெளிவாகக் காணமுடியும்.
  4. அடையாளக்குறியீடு: ரூ.10 தாளைத் தவிர மற்றவற்றில் நீர்க்குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20 இல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50 இல் சதுரம், ரூ.100இல் முக்கோணம், ரூ.500 இல் வட்டம், ரூ.1000 இல் சாய்சதுரம்) இது பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.
  5.  செதுக்குருவம்: மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.
  6. ஒளிரும் தன்மை: தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.
  7. பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை: ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும்  ரூ.1000 இன் மேல் (லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில்)  ஆகியன பார்வைத் தோற்றத்தில் மாறுபடும் அதாவது வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்கள் கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.
கள்ள நோட்டுகள்
 
 (28) நல்ல தாளுக்கும் கள்ள தாளுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவது எப்படி? அதாவது நல்ல நோட்டா? கள்ளநோட்டா? என தெரிந்துகொள்வது எப்படி?
 மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இல்லாத தாள்கள் கள்ள தாள்கள் என சந்தேகிக்கப்படுகின்றன. இவை துல்லியமாகப் பரிசோதிக்கப் படுகின்றன.
 
 (29) கள்ள நோட்டுகளை அச்சிடுவது, புழக்கத்தில் விடுவது ஆகியன தொடர்பான சட்ட விதிகள் எவை?
 கள்ள தாள்களை அச்சிடுவதும், புழக்கத்தில் விடுவதும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 489A இலிருந்து 489 E வரை உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். குற்றத்தின் தன்மைமையைப் பொறுத்து அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
 
நினைவில் கொள்க: விழிப்புணர்வுடைய மக்களே கள்ளத்தாள்களுக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாவலர்கள்.
 
இது ஒரு மின்னணு ஆவணம். மிகச் சரியான வாசகத்துக்கு அச்சிடப்பட்ட வெளியீட்டினைப் பார்க்கவும்.
 

ரிசர்வ் வங்கி கிளைகள் மீது அதிருப்தியா புகார் செய்யுங்க!.

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். உங்களுக்கு அதிருப்தி என்றால் ரிசர்வ் வங்கி மீதே முறையீடு செய்யலாங்க...
 விரிவாக இங்கு படியுங்க...பதிவிட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இணையதளத்திற்கு நன்றிங்க...



ரிசர்வ் வங்கியின் வட்டார அலுவலகங்களில் மண்டல இயக்குநர் தலைமையில் குறைதீர்க்கும் பிரிவுகளை, இந்திய ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.  
       ரிசர்வ் வங்கியின் எந்தத் துறை மீதேனும் யாருக்கேனும் குறை இருந்தால், அதனை இந்தக் குறைதீர்க்கும் பிரிவில் முறையிடலாம். முறையிடுபவரின் பெயர் முகவரியுடன் எத்துறை மீது குறை உள்ளதோ, அத்துறையையும் குறிப்பிட்டு, அக்குறைக்குரிய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளையும் இணைத்துக் குறைகளை இப்பிரிவுக்கு அனுப்பலாம். பொதுமக்கள் கீழே சொல்லப்பட்டுள்ள ரிசர்வ் வங்கிக்கிளை அலுவலர்களை தங்கள் குறை சம்பந்தமாக நேரிலும் தொடர்பு கொள்ளலாம்.  
ரிசர்வ் வங்கிக் கிளை அலுவலகங்களிலுள்ள குறைதீர்க்கும் பிரிவின் அலுவலர்கள் : - 
அலுவலகம்
அலுவலர்
தொலைபேசி எண்
அஹமதாபாத்
திரு. தீபக் சிகாலே,  மேலாளர்
079 - 27542216
பெங்களூரு
திருமதி. நிஷா நம்பியார்உதவி பொது மேலாளர்
080 22277620
பேலாபூர்
திரு.பி.எம்.பட்நாயக், உதவி பொது மேலாளர்
022 27576717
போபால்
திரு. தி.சி. சோனி, மேலாளர்
0755 2553179
புவணேஸ்வர்
திருமதி.மநீஷா மிஷ்ரா, உதவி பொது மேலாளர்
0674 2406089
சண்டிகார்
திரு. அரவிந்த் கே.சர்மா, துணை பொது மேலாளர்
0172 2721366
சென்னை
திரு.எஸ்.பி.சுரேஷ் குமார், உதவி பொது மேலாளர்
044 25367236
கவஹாதி
திரு.பி.ப்ரமோத் குமார், உதவி பொது மேலாளர்
0361 2517111
ஹைதராபாத்
திரு.கே.மோகன் ராவ், உதவி பொது மேலாளர்
040 23231043
ஜெய்பூர்
திரு.ஜி.சி. சிங்கி, மேலாளர்
0141 2562060
ஜம்மு
திரு. சோடாராம், மேலாளர்
0191 2474886
கான்பூர்
திரு ஜி.கே. மோகன், உதவி பொது மேலாளர்
0512 2306381
கொச்சி
திருமதி. சாந்தா பால், மேலாளர்
0484 2402820
கொல்கத்தா
திரு.எ.பி.மஹாபத்ரா, துணை பொது மேலாளர்
033 22300470
லக்நவ்
திரு ஜி.கே. மோகன், உதவி பொது மேலாளர்
0512 2306381
மும்பை
திருமதி.எ.எஸ். தேலாங், உதவி பொது மேலாளர்
022 22665724
நாக்பூர்
திரு. தி.தி.ஷாகன்ஜ்கர், மேலாளர்
0712 2532351 - விரிவு 387
புது டெல்லி
திரு.ஜி.சி.தாலுக்தார், உதவி பொது மேலாளர்
011 23731054
பனாஜி
திரு.ராஹுல் சின்னா, மேலாளர்
0832 2438660
பட்னா
திரு.சந்தன் குமார், உதவி பொது மேலாளர்
0612 2322587
திருவனந்தபுரம்
திரு. ஜி. லெனின், மேலாளர்
0471 2324778
 35 நாட்களுக்குள் புகார் கொடுத்தவருக்குப் பதில் கிடைக்காவிட்டாலும், அல்லது பதில் அவருக்குத் திருப்தி அளிக்காவிட்டாலும்,  
     முறையீட்டாளர் கீழே குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். 
       திரு.சி.கிருஷ்ணன், செயல் இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலகக்கட்டிடம், சாஹித் பகத் சிங் மார்க், மும்பை – 400 001.