Wednesday 30 December 2015

நுகர்வோர் விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி- நம்ம கோபியில்..

        வாங்குவோரே விழித்திரு.,   நுகர்வோரே சந்தைக்கு அரசன்..
              சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 2015டிசம்பர் 30 ந் தேதி இன்று கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நுகர்வோர் நலவாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக 30வது தேசிய  நுகர்வோர் தினம் மற்றும் 27 வது சாலை பாதுகாப்புவாரவிழா பேரணி உட்பட ஐம்பெரும்விழா நடைபெற்றது.







            கோபி சீதா கல்யாண மண்டப வளாகத்தில் முகப்பு பகுதியில் தமிழ்நாடு அரசு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக பொதுமக்களுக்காக நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 (1) திருமிகு. K.N.மோகன் அவர்கள், தொழிலாளர் ஆய்வாளர், 
(2)திருமிகு. R.மாதேஸ்வரன் அவர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர் ,(3)திருமிகு.D. பாபு அவர்கள் கோபி தொழிலாளர் உதவி ஆய்வாளர்,
(4)திருமிகு. R.யுவராஜ் அவர்கள்,சத்தி தொழிலாளர் உதவி ஆய்வாளர்,
(5)திருமிகு.P.ஆண்டவன் அவர்கள்,பவானி தொழிலாளர் உதவி ஆய்வாளர்,
 இவர்களுடன் 
(6)திருமிகு. R.செல்வி அம்மையார் அவர்கள்,முத்திரை ஆய்வாளர் 
    ஆகியஅதிகாரிகள்பொதுமக்களுக்குநிறுத்தலளவைகள்,முகத்தலளவைகள் பற்றி விளக்கி மோசடி வணிகர்களும்,ஏமாற்று விற்பனையாளர்களும் வாங்குவோரை ஏமாற்றுவதற்காக எடையிடப்படும் தராசுகளிலும்,எடைக்கற்களிலும் ,முகந்து எடுக்கும் லிட்டர் அளவு கருவிகளிலும் செய்யும் பித்தலாட்டங்களை செயல்விளக்கத்தோடு எடுத்துக்காட்டி நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்வுக்கு சமூகம் சார்பாக நன்றிகள் பல... 


வாங்குவோரை ஏமாற்ற, லிட்டர் அளவையில் அடிப்பகுதி குழிவாக செய்யப்பட்டுள்ளதை விளக்கும் காட்சி..
வாங்குவோரை ஏமாற்ற, முகத்தலளவையில் மேற்பகுதி கடைசல் செய்யப்பட்டு உயர அளவை குறைத்துள்ளதை விளக்கிய காட்சி..
வாங்குவோரை ஏமாற்ற, தராசுத்தட்டில்  பொருள் அளக்கும் அடிப்பகுதி கனமான தகடு ஒட்டப்பட்டுள்ளதை விளக்கும் காட்சி...
வாங்குவோரை ஏமாற்ற ,பாக்கெட் பொருட்களில் லேபிள்கள் மற்றும் காலாவதியான தேதி பற்றிய விளக்கம் கொடுத்த காட்சி..
நுகர்வோர் விழிப்புணர்வுக்காக, அரசு அதிகாரிகளின் பொறுப்பான விளக்கவுரை காட்சி....
வாங்குவோரை ஏமாற்ற, முகத்தலளவையில் அளவு குறைப்பதற்காக அடிப்பகுதியில்   தகட்டால் உயர்த்திப் பொருத்தப்பட்டுள்ளதை விளக்கும்  காட்சி..
  நுகர்வோர் விழிப்புணர்வுக்காக ,
        அனைத்து நிறுத்தல்,முகத்தல் கருவிகளுக்கு அரசு முத்திரையிடப்பட்டுள்ளதை விளக்கி அதன் அவசியத்தை எடுத்துரைக்கும்  காட்சி..
  வாங்குவோரை ஏமாற்ற முகத்தலளவையில் மோசடி வணிகர்கள்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யும் நூதனக் கோளாறுகளை விளக்கிய காட்சி..
வாங்குவோரை ஏமாற்ற முகத்தலளவையில் அடிப்பகுதி ஒடுக்கி ஏமாற்றுவதை விளக்கிய காட்சி..
வாங்குவோரை ஏமாற்ற நிறுத்தலளவையில் வாங்குவோரை ஏமாற்ற  எடைக்கற்களின்  அடிப்பகுதியில் கடைசல் செய்து எடை அளவை குறைத்துள்ளதை விளக்கிய காட்சி...
தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள முகத்தலளவையும்,அதிலும் வாங்குவோரை ஏமாற்ற செய்யப்பட்டுள்ள நவீன யுத்திகளை விளக்கிய காட்சி...
தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள முகத்தலளவையும்,அதிலும் வாங்குவோரை ஏமாற்ற செய்யப்பட்டுள்ள நவீன யுத்திகளை விளக்கிய காட்சி...
  என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
அன்பன்
 C. பரமேஸ்வரன், செயலாளர்,9585600733
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

Tuesday 8 December 2015

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உங்க நிதியை அனுப்புங்க

சென்னை,கடலூர் மக்களுக்கு     நீங்களும் உதவுங்க...........
             உங்க ஊரிலிருந்தே  நிதியாக தமிழக அரசுக்கு அனுப்புங்க...

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். சென்னைமற்றும் கடலூர்  இதுவரை சந்தித்திராத மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.நமது உறவுகள் உறைவிடம்,உணவு,உடை உட்பட தங்கள் உடைமைகளை இழந்து  மிகவும் கொடுமையாக பாதிக்கப்பட்டு துன்பப்பட்டு வருகிறார்கள்.

          தமிழ்நாடு அரசு மற்றும் நமது தேசத்தின் மற்ற மாநில அரசுகள்,உலக நாடுகள்,தனியார் நிறுவனங்கள்,பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வலர்கள்,என  அனைவரும் உதவி செய்வதை  தம் கடமையாக,பொறுப்பாக,மனித நேயப்பணியாக ஏற்று  மீட்பு பணிகளிலும்,நிவாரணப்பணிகளிலும்,சுகாதாரப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஊடகங்களும் தக்க உதவிகளைச் செய்து வருகின்றன.இவ்வாறு உடனடியாக உதவி செய்து வரும் அனைவரையும் தமிழக மக்கள் சார்பாக நமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வோம்.

     அதே நேரத்தில் தம்மால் இயன்ற நிதியை எப்படி சேர்ப்பது என தெரியாமல் தவிப்பவர்கள் இதோ கீழ்கண்ட முகவரிக்கு உங்க பக்கத்து வங்கியில் சென்று பணத்தை செலுத்தி நீங்களும் நிவாரணப்பணிகளில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம். 

     விருப்பமுள்ள தாங்கள் அவ்வாறு நிதி உதவி செய்ய  chief minister's public relief fund என்ற பெயரில் காசோலை/ வரைவோலை மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம். இந்த நிவாரண நிதிக்கு 100 விழுக்காடு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.


முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டிய முகவரி:
 The Joint Secretary & Treasurer, 
Chief Minister's Public Relief Fund, 
Finance (CMPRF) Department, 
Government of Tamil Nadu. 
Secretariat, 
Chennai 600 009 
Tamil Nadu, 
INDIA. 
 மின்னஞ்சல்: 
jscmprf@tn.gov.in 
வங்கி கணக்கில் இணையம் (ECS) மூலம் பணம் செலுத்துவோர் கீழ்காணும் விவரங்களை கொண்டு பணம் அனுப்பலாம்
 Bank : Indian Overseas Bank 
Branch : Secretariat Branch, 
Chennai 600 009 
S.B. A/c No. : 11720 10000 00070 
IFS Code : IOBA0001172 
CMPRF PAN : AAAGC0038F 
         இணையம் மூலமாக நிதி செலுத்துவோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை எண் போன்றவற்றுடன், தங்களது தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அப்போது தான் பெற்ற பணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்.  வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்கவும் உதவியாக இருக்கும்.