Thursday 16 July 2015

CITIZEN CONSUMER CLUB KASC SATHY & SALEM CONSUMER VOICE



              நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்......
நம்ம சத்தியமங்கலத்தில்..
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                       2015ஜூலை 16 ந் தேதி இன்று சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திரு.R.பெருமாள்சாமி ஐயா அவர்கள் கல்லூரி தாளாளர் தலைமை ஏற்க 
திருமதி.P.மலர்செல்வி அவர்கள் 
  இணை செயலாளர் முன்னிலை வகித்தார்.
Dr.K.செந்தில் குமார் அவர்கள்,கல்லூரி முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார். 
திரு.J. முகம்மது சதாம் உசேன்II-B.COM IT அனைவரையும் வரவேற்றார்.
திரு.C. பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அவர்கள் சிறப்பு விருந்தினர் 
  திரு. J.M.பூபதி ஐயா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். 

                        சிறப்பு விருந்தினராக திரு.J.M.பூபதி ஐயா ''சேலம் நுகர்வோர் குரல்'' அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் நிறுவனத்தலைவர் (சேலம்) அவர்கள் கலந்து கொண்டு,
''மின்னுவதெல்லாம் பொன்னல்ல''  
                    என்ற தலைப்பில் நுகர்வோராகிய நாம்தாங்க விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

                திரு. J.M.பூபதி ஐயா சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் அவர்களுக்கும் L.பிரபாகரன் சேலம் கன்ஸ்யூமர்வாய்ஸ் பொருளாளர் அவர்களுக்கும் CITIZEN CONSUMER CLUB மாணவர்கள் சார்பாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

             திரு. திரு.M.ஶ்ரீபிரசாந்த் II - M.COM நன்றி கூற தேசிய கீதம் பாடலுடன் நிறைவடைந்தது..
    பேரா.T.சரவணன் அவர்கள் CITIZEN CONSUMER CLUB ஒருங்கிணைப்பாளர்,நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.














Sunday 12 July 2015

BEST SOCIAL ACTIVIST AWARD-2015

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். 2015ஜூலை12ந்தேதி இன்று  புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் 
 புன்செய்ப்புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கம் ,ஶ்ரீதேனு சில்க்ஸ்,அம்மா மெட்ரிக் பள்ளி,கல்வித்தந்தை K.V.காளியப்ப கவுண்டர் நற்பணி மன்றம்,SMH ரியல் எஸ்டேட்ஸ் கோவை&புன்செய்ப்புளியம்பட்டி இணைந்து 
 S.S.L.C. மற்றும்  PLUS TWO பொதுத் தேர்வில் ஈரோடு,கோபி,கோவை,திருப்பூர்,நீலகிரி கல்வி மாவட்டங்களில் மாநில அளவில்,மாவட்ட அளவில்,பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ,மாணவியருக்கும்,நூறுசதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும்,மாநில அளவில் சாதனை படைத்த இருபால் ஆசிரியர்களுக்கும்,பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும்
 விடியல் மாணவர் விருதுகள் 2014-2015
 ஶ்ரீதேனு சில்க்ஸ் முதல்வன் விருதுகள்,
 அம்மா மெட்ரிக் கலைமகள் விருதுகள்,
 கே.வி. காளியப்ப கவுண்டர் சாதனை விருதுகள்  
                வழங்கும் விழா  நடைபெற்றது.திருமதி.ராணி லக்ஷ்மி அன்பு அவர்கள்,செயலாளர்,அம்மா மெட்ரிக் பள்ளி,பன்செய்ப்புளியம்பட்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். 
திரு. எஸ்.ஜெயகாந்தன் ,செயலாளர்,விடியல் சமூக நல இயக்கம் அவர்கள்,வரவேற்புரை அளித்தார்.
திரு.R.பழனிச்சாமி அவர்கள்,,நிறுவனத்தலைவர்,S.R.S.குரூப்ஸ்,பு.புளியம்பட்டி அவர்கள் தலைமை ஏற்றார்.
முதன்மை விருந்தினராக டாக்டர்.மா.பத்மநாபன் அவர்கள்,இயக்குநர்,அண்ணா IASபயிற்சி மையம்,பாரதியார் பல்கலைக் கழகம்-கோவை அவர்களும்,
திரு.சண்முக சுந்தரம் அவர்கள், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தின் இயக்குநர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












Friday 3 July 2015

ST.JOSEPH'S HIGHER SECONDARY SCHOOL-SOOSAIPURAM-638461

புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி - சூசைபுரம்,தாளவாடி-638461

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். 
           இன்று பதிமூன்றாவது நாளாக....ஹெல்மெட் அணியுங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.......
            2015 ஜூலை 1 ந்தேதி இன்று காலை புனித ஜோசப்ஸ் மேல்நிலைப்பள்ளி,சூசைபுரம்-தாளவாடியில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.அதுசமயம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
வரவேற்புரை;திரு.அறிவழகன் அவர்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர்

தலைமையுரை;பள்ளியின் தாளாளரும் 
                          தலைமையாசிரியருமான திருமிகு.பாதிரியார்  அவர்கள்
 தேசியக்கொடி ஏற்றும் புனிதமான நிகழ்வு;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்.

             திரு.C.பரமேஸ்வரன் அவர்களது சாலை பாதுகாப்பு கல்வி தலைக்கவசம் நம் உயிர்க்கவசம் என விழிப்புரை..
        

              இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளியின் தாளாளர் தலைமையாசிரியர் (பாதிரியார்)  அவர்கள் முன்னிலையில் மாணவர் பொறுப்பாளர்களிடம் ஆயிரம் நோட்டீஸ் வழங்குதல்.அருகில் உதவி தலைமையாசிரியர் திரு.அறிவழகன் அவர்கள்.


ஹெல்மெட் விழிப்புணர்வு பன்னிரண்டாவது நாள்

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். இன்று பன்னிரண்டாவது நாளாக தலைக்கவசம் நம் உயிர்க்கவசம் என தாளவாடி வட்டார பொதுமக்களிடையே விழிப்புணர்வுப்பிரச்சாரம் செய்யப்பட்டது..

  KSRTC BUS SERVICE கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சாம்ராஜ்நகர் ஓட்டுநர் மாதேவ் ....

 தாளவாடி மக்கள்