Friday, 22 November 2013

.பிளாஸ்டிக் நன்மையா?தீமையா?

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.
                  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் நன்மையா?தீமையா? என இங்கு காண்போம்.                

                முந்தைய காலங்களில் காகிதங்களில் பொட்டலமாகவும்,துணிப்பைகளில் அல்லது மூங்கில் கூடைகளிலும் எந்த பொருட்களானாலும் வாங்கி வருவோம்.ஆனால் இன்றைய காலங்களில்    கையை வீசி கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு போய் வரும் போது கை நிறைய  பிளாஸ்டிக் பையில் பொருட்களை வாங்கி கொண்டு வருவது இப்போது நாகரீகமாகிவிட்டது..   துணி பை அல்லது வயர் கூடையில்  பொருட்களை வாங்கி கொண்டு வந்தவர்களை, பிளாஸ்டிக் பையை உருவாக்கி அதையே உபோயோகிக்க வைத்து  அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி க்கொண்டோம்?.குறைந்த செலவில் நிறைந்த பலனைக்கொடுக்கும்வகையில் ஒருமுறை வாங்கியதும் எளிதில் மக்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. பிளாஸ்டிக் குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்.


                இருந்தாலும் சமுதாய நோக்கோடு  பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கையில்  இருந்து  ஒரு சில துளிகள்:

ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள்.கடலில் மிதந்துகொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே!  தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலமோ 100-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் எக்காலத்திலும் அழியாது.

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.

பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிப்பதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம்.  அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.



பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம்


மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பகத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் தீமைகளும் அதனை ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதலும் பற்றி இங்கு காண்போம்.
  • பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவி ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.நகரிலும் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ஆய்வு!!..




04 மே 2012 காலை 09:04
பிளாஸ்டிக் சாலை குறித்த கருத்தரங்கம் காயல்பட்டினம் நகராட்சியில் நேற்று (03-05-12 ) காலை நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதா தலைமை வகித்தார். நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் திரு.பொன்வேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100_2745
நேற்றைய கருத்தரங்களில் பிளாஸ்டிக் சாலைகளால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் அசைப்படக்கருவி ஊடாக மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
100_2748
நகர்மன்ற உறுப்பினர்.திரு.இ.எம் சாமி அறிமுக உரை ஆற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
100_2752
100_2774
பிளாஸ்டிக் சாலை செய்முறை
பிளாஸ்டிக் சாலை செய்முறை குறித்து திரு.வாசுதேவன் குறிப்பிடுகையில் இயந்திரத்தில் போட்ட சாலை போடும் சிறு சரளைக் கற்கள், 170 டிகிரி செல்சியஸ் சூடானதும், சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தூவப்படுகிறது. அவை உருகியதும், தார் ஊற்றி, கலவை தயாரிக்கப்பட்டு, சாலை போடப்படுகிறது.
100_2791
பிளாஸ்டிக் சாலைகளாகும் இந்தியா
பிளாஸ்டிக் பிடிப்புத் தன்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும், சாலைகள் சேதமடையாமல் உள்ளன.பிளாஸ்டிக் கொண்டு அமைக்கும் சாலை, நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் கண்டறிந்த, மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் வாசுதேவன் நேரடி ஆலோசனையின்படி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு வருவதை குறிப்பிட்டார்.
100_2775
பிளாஸ்டிக் சாலை குறித்த சந்தேககங்களுக்கு பதில்
கருத்தரங்க இறுதியில் பிளாஸ்டிக் சாலைகளினால் விளையும் நன்மை, தீமைகள் குறித்த பொதுமக்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர் திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
DOUBT
இக்கருத்தரங்கில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு  பயன் பெற்றனர். இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.எம்.பி முருகானந்தம்,ஆத்தூர் E.O திரு.முத்து கிருஷ்ணன், ஆறுமுகநேரி E.O குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தற்போது 10 மாநகராட்சி 119 நகராட்சி, 90 பேரூராட்சிகள், 45 ஊராட்சிகளில் 446.50 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுவருகிறது 2012-13-ம் ஆண்டில் ரூ.100 கோடி செலவில் இந்த திட்டம்தொடர்ந்து செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளது என அரசு அறிவித்துள்ளது.
100_2747
இதனை தொடர்ந்து நமது நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம் இருப்பதாக நகர்மன்ற தலைவர் ஐ .ஆபிதா தெரிவித்தார்.
100_2827
நிகழ்ச்சியின் இறுதியில் திரு.வாசுதேவன் அவர்களுக்கு நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார.இதனை அடுத்து நன்றி உரையுடன் இக்கருத்தரங்கம் நிறைவுற்றது.
நகரில் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம்
தற்போது நகரில் பிளாஸ்டிக் சாலை அமையவிருக்கும் பகுதிகளான கூலக்கடை பஜார், கொச்சியார் தெரு மற்றும் அருனாசலபுரம் ஆகிய பகுதிகளுக்கு நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதாவுடன் நேரில் சென்று திரு. வாசுதேவன் ஆய்வு செய்தார்.
100_2830
100_2844
இந்த ஆய்வின்போது ஒப்பந்தக்காரர் திரு.ஜமீன் ராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான M.S.M சம்சுத்தீன், M.M.T. பீவி பாத்திமா,மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் உடன் இருந்தனர்.
100_2853
100_2863
பிளாஸ்டிக் சாலை போடும்போது தாம் வருகை தந்து  சில ஆலோசனைகள் வழங்குவதாக  திரு.வாசுதேவன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
நம்மால் தவிர்க்கமுடியாத அடிமையாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவினை பயனுள்ள வகையில்  பிளாஸ்டிக் தார்ச்சாலை போட கண்டுபிடித்த முனைவர்.வாசுதேவன்  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்  அவர்களை நாமும் வாழ்த்துவோம்.இச்செய்தி வெளியிட்ட www.kayalnews.com வலைத்தளத்திற்கு நன்றிகள் பல கூறுவோம்.

பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மரியாதைக்குரியவர்களே,
                                  வணக்கம்.
                              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்


              திருப்பரங்குன்றம்:மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வேதியியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமி வெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக் ரோடு அமைக்க முடிவு செய்தார். கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.

பிளாஸ்டிக் ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் 2002ல் போடப் பட்டது. கிராம வளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக் ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது.தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது ஆராய்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு போடும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய கேட்டது.
ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாக ராஜர் இன்ஜி., கல்லூரிக்கு மத்திய அரசு காப்புரிமை 2006ல் வழங்கியது.நிதி உதவி: பிளாஸ்டிக் ரோட்டின் தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம் அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகங்களை இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்புத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. அந்த புத்தகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ரோடுகள் தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்ச கத்தின் தேசிய கிராமப்புற ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதற்கான “கைடு லைன்’ வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது:மத்திய அரசு அளித்துள்ள கைடு லைன் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும். சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள் கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும், தொழில் நுட்பத்தில் உதவியவர்களுக்கும் நன்றி.பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க விரும்புவோர் 0452-2482240 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு வாசுதேவன் கூறினார்.
Source Thanks : dinamalar

Sunday, 3 November 2013

பரிசீலனை கூட்டம்-2013

மரியாதைக்குரியவர்களே,
                                     வணக்கம்.
                                       
                                CPARS.ORG சங்க அறிவிப்பு.
            இடம்;மாநில மையம்,சத்தியமங்கலம்.
            தேதி;03-11-2013.
                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,பதிவு எண்-26/2013 சங்கத்தின் 
           கடந்த 2013 அக்டோபர்-01ம் தேதி முதல் அக்டோபர்-07ம் தேதி வரை உட்பட கடந்த கால செயல்பாடுகள் பற்றிய பரிசீலனை கூட்டம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை
( 10-11-2013 அன்று) 
மாலை 03-30 மணிக்கு  
  ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு இன்றுவரை மற்றும் வருங்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைக்கான ஆலோசனைகள் பற்றி கருத்துரை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.விருப்பமுள்ள ''சங்க வளர்ச்சியில் ஆர்வமுள்ள'' அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு வழங்கும்ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்   எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.
என 
அன்புடன்
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு- பதிவு எண் 26/2013.
மாநில மையம்.சத்தியமங்கலம்-638402.
  ஈரோடு மாவட்டம்.
                                                                              (பார்வை=1850)

Monday, 14 October 2013

குடிபோதையா?..

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.
             நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      TASMAC-Tamilnadu State Marketing Corporation 
                                  பற்றி எதற்காக கவலைப்படணும்?
         இதை படியுங்க முதலில்....
              அரசு மதுபானக்கடையில் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு புத்தகம் போன்று ஒரு அடையாள அட்டை கட்டாயப்படுத்தி கொடுக்க வேண்டும்.
        தினசரி அல்லது ஒரு மாதத்தில் எவ்வளவு குடிக்கிறார்கள் என்று அந்த அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.
           குடித்த அளவு விவரத்தையும்,எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்? என்ற நேரத்தையும்,எத்தனை ரூபாய்க்கு குடித்திருக்கிறார்கள்?,குடித்த பிறகு மருத்துவத்திற்கு எத்தனை செலவு செய்துள்ளார்கள்?என்ற விவரத்தையும் ஊரறிய தெரிவிக்க வேண்டும்.அல்லது அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.
         எந்தப்பகுதியில் குடித்தாலும் அடையாள அட்டையில் பதிய வைக்க வேண்டும்.அதாவது பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
        இருபத்தொரு வயதுக்குள் குடிப்பவர்களை அடையாளம் காண வேண்டும்.அதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி இளவயதுடையவர்களை  கண்டறிந்து தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.மாணவப்பருவத்தில் குடிக்க பழக்கியவர்களை அறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
       அரசு மருத்துவ மனைகளில் குடிபோதைக்கு அடிமையானவர்களை திருத்த ஆலோசனை மையம் அமைத்து அனைவருக்கும் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.குடிபோதையின் தீமைகளை விளம்பரப்படுத்த வேண்டும்.இதனை போர்க்கால நடவடிக்கையாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.இல்லையேல் வருங்கால இந்தியா?  கேள்விக்குறியாகிவிடும்.என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. என்பதை அரசாங்கம் மட்டுமின்றி அனைவரும் உணர வேண்டும்.

Sunday, 13 October 2013

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.ஆதார் அட்டை பெறுவது எப்படி? இதன் விளக்கத்தினை காண்போம்.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வங்கிக் கணக்குத் துவக்க, கியாஸ் இணைப்புப் பெற, பாஸ்போர்ட் பெற, வீடு வாங்க, விற்க போன்றவற்றிற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? எப்போது கிடைக்கும்? யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் உங்களுக்காக இதோ...

ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:

இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?

இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.

தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.

சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.

இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.

1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?

தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:

https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:

ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.

மேலதிக தகவலுக்கு:


1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.

https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.




ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு தமிழகத்தில் பல இடங்களில் துவங்கி விட்டது. ஆதார் என்பது ஒவ்வொரு இந்திய வாழ் குடிமகனுக்கும் அரசு வழங்கும் ஒரு யுனிக் அடையாள எண் மற்றும் அடையாள அட்டை . 12 டிஜிட்களான இந்த ஆதார் யுஐடி ( UID)  இப்போது அனைவருக்கும் வழங்கடுகிறது. பிற்காலத்தில் ரேஷன் கார்டு, ஓட்டளிக்கும் வாக்காளர் அடையாள அட்டை ( ஓட்டர் ஐடி கார்டு –  Voter ID card) ,பேன் கார்டு PAN card என அனைத்தையும் இந்த ஆதார் அட்டைக்குள்ளேயே கொண்டு வர அரசு முனைந்துள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டை ( ஆதார் ஸ்மார்ட் கார்டு) வாங்க என்னென்ன நிரூபண ஆவணங்கள் ( ப்ரூஃப் ) நாம் கொண்டு செல்ல வேண்டும் ?
Proof of name and photo identity: (any one from list below)
  • Passport
  • PAN card
  • Ration/PDS photo card
  • Voter ID
  • Driving license
  • Government photo ID cards
  • NREGS job card
  • photo ID issued by recognised educational institute
  • Arms license
  • photo bank ATM card
  • photo credit card
  • pensioner photo card
  • freedom fighter photo card
  • kisan photo passbook
  • CGHS/ECHS photo card
  • Address card having name photo issued bu department of post.
Proof of address: (any one from list below):
  • Passport
  • Bank Statement
  • Passbook
  • Post Office
  • Account Statement/Passbook
  • Ration Card
  • Voter ID /Driving License
  • Government Photo ID cards
  • Electricity Bill (not older than 3 months)
  • Water bill (not older than 3 months)
  • Telephone Landline Bill (not older than 3 months)
  • Property Tax Receipt (not older than 3 months)
  • Credit Card Statement (not older than 3 months)
  • Insurance Policy
  • Signed Letter having Photo from Bank on letterhead
  • Signed Letter having Photo issued by registered Company on letterhead
  • Signed Letter having Photo issued by Recognized Educational Instruction on letterhead
  • NREGS Job Card
  • Arms License
  • Pensioner Card
  • Freedom Fighter Card
  • Kissan Passbook
  • CGHS / ECHS Card
  • Certificate of Address having photo issued by MP or MLA or Group A Gazetted Officer on letterhead
  • Certificate of Address issued by Village Panchayat head or its equivalent authority (for rural areas)
  • Income Tax Assessment Order
  • Vehicle Registration Certificate
  • Registered Sale / Lease / Rent Agreement
  • Address Card having Photo issued by Department of Posts
  • Caste and Domicile Certificate having Photo issued by State Govt.
Proof of DoB (optional) : (any one from list below)
  • Birth Certificate
  • SSLC Book/Certificate
  • Passport
  • Certificate of Date of Birth issued by Group A Gazetted Officer on letterhead
இவற்றை எடுத்துக் கொண்டு உங்கள் அருகில் உள்ள ஆதார் என்ரோல்மென்ட் கேம்புக்கு செல்ல வேண்டும்.
அங்கே
  1. ஆவண சோதனை – Documents Verification.
  2. பத்து விரல் ரேகை பயோமெட்ரிக் ஸ்கேனிங்க் –  Biometric Scanning of Ten Fingerprints.
  3. கண் ஐரிஸ் பயோமெற்றிக் ஸ்கேனிங்க் Biometric Scanning of Iris.
  4. புகைப்படம் – Photograph.

Friday, 11 October 2013

தின மணி 11-10-2013செய்தியில் காண்க.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.
                   தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம் ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''  நிறைவுவிழா அக்டோபர் எட்டாம் தேதி கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.அதன் விவரம் தினசரி நாளிதழான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது காண்க.

 தினமணி செய்தித்தாளின் புகைப்படத்தில், வலது கடைசியிலிருந்து,(1)Dr.R.செல்லப்பன் ஐயா M.B.A.,M.Com.,M.Phil.,Ph.D. முதல்வர் அவர்கள்,(2)கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் திரு.K.M.நடராஜன் ஐயா B.A.B.L.,அவர்கள்,(3)கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர் திரு.P.கருப்பண்ணன்,B.A.B.L., அவர்கள்,(4) திரு.ஈரோடு கதிர் ஐயா கவிஞர்-அவர்கள்,(5)திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்(CPARSORG)அவர்கள்,(6)திரு.K.ராஜேந்திரன் ஐயா,M.B.A.,M.Com.,M.Phil.,அவர்கள்-S.S.L.திட்ட அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர்.(7)Dr.M.சுந்தரமூர்த்தி ஐயா,M.A.M.Phil.,Ph.D.,அவர்கள்,N.S.S.திட்ட அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர்.
    2013ம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று நடந்த   ஈரோடு வாசகர் வட்ட விழாவில் தினமணி ஆசிரியர் திரு.K.வைத்தியநாதன் ஐயா அவர்களுடன்.திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர் (CPARSORG)அவர்கள்.அருகில் திரு.ஸ்டாலின் குணசேகரன் ஐயா அவர்கள் மற்றும் பல சான்றோர்கள்.
என அன்பன்
 பரமேஸ்வரன்.சி,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு, பதிவு எண்26/2013

(1717)