Sunday, 26 April 2015

கடம்பூர் மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்-2015



மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.2015ஏப்ரல் 25 சனிக்கிழமை அன்று கடம்பூர் மலைப்பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு & சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு நடத்தியது.






கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
         இலவச கண் சிகிச்சை முகாம்...25.04.2015சனிக்கிழமை.





        யானையால் தாக்கப்பட்டு வலது கண் இழந்த நிலையில் இடது கண்பார்வையும் சரியில்லை என சிகிச்சை பெற வருகை புரிந்துள்ள பழங்குடி இனத்தின் பெரியவர்.










 கண் மருத்துவர் நோயாளி ஒருவரின் கண்ணைப் பரிசோதித்தபோது.........




        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன் துணை தலைவர் S. ரவி அவர்கள்..





        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன்  S.ரவி துணைத்தலைவர் மற்றும்  
         C. பரமேஸ்வரன்,செயலாளர் அவர்கள்..

கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளித்தபின்னர் திரும்பியபோது......





Sunday, 19 April 2015

மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நம் முன்னோர்கள் மிக எளிதில் கிடைக்கும் தாவரங்களின் மருத்துவப் பயன் அறிந்து வைத்தியம் செய்து கொடிய நோய்களையும் குணமாக்கினார்கள்.ஆனால் நமது அறியாமையினாலும்,ஆர்வமின்மையாலும்,அத்தகைய மருத்துவத்தாவரங்களை நாம் களைகளாகவும்,வீணான புதர்களாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.தாவரங்களின் மருத்துவ சிகிச்சைகளால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.எளிமையாக கூற வேண்டுமானால் உணவே மருந்து எனலாம்.அத்தகைய தாவரங்களை கண்டறிந்து சேகரித்து தொகுத்து வளர்த்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஆகிய நமது அமைப்பானது மருத்துவத்தாவரங்களையும் பாதுகாக்க உறுதி ஏற்றுள்ளது.அதாவது தாளவாடி மலை,கடம்பூர் மலை,பர்கூர் மலை,உதகை மற்றும் கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகள் உட்பட அனைத்து சித்த மருத்துவர்களையும்,அரசு சித்த மருத்துவர்களையும்,நாட்டு வைத்தியர்களையும்,நாட்டு மருந்துக்கடைகளையும்,கல்வித்துறையையும்,வனத்துறையையும்,
வேளாண்மைத்துறையையும்,பழங்குடிஇனத்தவர்களையும்,நர்சரி அமைத்துள்ளவர்களையும்,தோட்டக்கலைத்துறையையும்,
விவசாயிகளையும்,தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து  மருத்துவத்தாவரங்களுக்கான மாபெரும் இயக்கமாக செயல்படுத்திட முடிவு எடுத்து........
           அதன் துவக்கமாக தாளவாடியில் உள்ள ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கிளையில் 2015ஏப்ரல்19 ஆம் தேதி இன்று திரு. T.ஆறுமுகம் கிளை மேலாளர் அவர்களால் கற்பூரவள்ளி செடி நட்டு மூலிகைப்பண்ணை துவக்கி வைத்தார்.திரு.C.பரமேஸ்வரன் செயலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்த பண்ணை 
    சத்தியமங்கலத்திலுள்ள  SRN மெட்ரிக்குலேசன் பள்ளி யில் 10சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு அதில் மருத்துத்தாவரங்கள் பண்ணை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்பு கொள்ள .........
    கைப்பேசி எண்    +919585600733 மற்றும்
    மின்னஞ்சல் முகவரி consumerandroad@gmail.com

Saturday, 11 April 2015

SRN மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம்.2015


மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 


                                               இன்று காலை10.00மணி முதல் மதியம்2.00 மணி வரை  மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 

 SRNமெட்ரிக்  பள்ளி தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச பொது மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.அறுபதுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.இலவச மருத்துவ முகாமின் துவக்கமான 
அறிமுகக் கூட்டத்தில்

SRN மெட்ரிக் தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E.,அவர்கள் தலைமை ஏற்க  

SRN மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் திரு. சண்முகவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.அரிமாK.லோகநாதன் அவர்கள் மற்றும் திரு. A.இராமசாமி அவர்கள்,தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் முன்னிலை வகித்தனர்.இலவச பொது மருத்துவ முகாம் சத்தியமங்கலத்தில் நடத்துவதன் நோக்கம் பற்றி 

திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் விளக்கினார்.
               அது சமயம்SRN மெட்ரிக் பள்ளி சார்பாக
         சத்தியமங்கலத்தின் மூத்த செய்தியாளர் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
  SRN மெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் சத்தி நகர மூத்த செய்தியாளர் திரு. கோபால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
 SRNமெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் 
REVATHI MEDICAL CENTRE பொது மருத்துவர் S.மகாராஜா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.அருகில் அரிமாK.லோகநாதன் சத்தியமங்கலம் அவர்கள்.
  SRNமெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர்.திரு.Pசண்முகவேல், அவர்கள் 
திரு.A.இராமசாமி தலைவர் நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
SRNமெட்ரிக் பள்ளியில் திரு.C.பரமேஸ்வரன்  அவர்கள் 
REVATHI MEDICAL CENTRE முகாம் மேலாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
திருப்பூர்  ரேவதி மெடிக்கல் சென்டர் 

பொது மருத்துவர் S.மகாராஜா அவர்கள் மற்றும்

மகளிர் சிறப்பு மருத்துவர் திருமதி உமாதேவி அவர்கள் தலைமையிலான

திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவர் குழு 

பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து தேவைப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

            முகாம் ஏற்பாட்டினை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை மற்றும் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.


Wednesday, 8 April 2015

SRN MATRIC SCHOOL-SATHYAMANGALAM ERODE Dt.

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.வருகிற 11.04.2015அன்று நம்ம சத்தியமங்கலத்திலுள்ள SRN மெட்ரிக் பள்ளியில் ரேவதி மெடிக்கல் சென்டர் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துகிறது.அனைவரும் வருக பயன் பெறுக.


Wednesday, 1 April 2015

PROTECT GIRLS- பெண் குழந்தைகளை பாதுகாப்போம்-2015


 மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
  ஈரோடு மாவட்ட அளவில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கலைப்பயணம் நிகழ்ச்சியை கடந்த 2015மார்ச் 30 ஆம் தேதி கோபி செட்டிபாளையத்தில் மதிப்புமிகு சப் கலெக்டர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


2015மார்ச் 31 ஆம் தேதி  இன்று காலை10.00மணியளவில்  சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கலைக்குழு விழிப்புணர்வு நிகழ்வு தொடர்ந்தது.

          சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் திரு.கருப்புசாமி அவர்கள்,கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய இயக்குநர். மற்றும் திரு.C. பரமேஸ்வரன் அவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், மற்றும் திரு. பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,அரசு மாதிரி பள்ளி-தாளவாடி.மற்றும்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைக்குழுவினர் சென்னை.



          திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் பெண் குழந்தைகளை காப்பது பற்றிய துவக்கவுரை-பேருந்து நிலையம் சத்தியமங்கலம்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலைக்குழுவினை வரவேற்று பெண் குழந்தைகளின் இன்னல்களை கூறி அவர்களுக்கு தேவை படிப்புரவிளையாட்டு,ஓய்வு என துவக்கவுரை நிகழ்த்தினார்.
      திருமதி.R.தங்கமணி அவர்கள் தலைமை ஆசிரியை தலைமை ஏற்று துவக்கவுரை-நகராட்சி உயர்நிலை பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலம்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தும் கலைக்குழுவினை பள்ளிக்கு வரவேற்று பெண்குழந்தைகளுக்கு தற்போதைய தேவை கல்வி மட்டுமே என உரை நிகழ்த்தினார்.
திருமதி.சரஸ்வதி சமூக நல விரிவு அலுவலர் அவர்கள்-ஊராட்சி ஒன்றியம் - சத்தியமங்கலம்.நகராட்சி உயர்நிலை பள்ளி ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நிகழ்த்தினார்.
திரு, C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அவர்களது பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நகராட்சி உயர்நிலை பள்ளி -ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில்.....

ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை திருமணம் குற்றம் என சுவற்றில் விளம்பரம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தங்களது பார்வைக்காக....



Thursday, 26 March 2015

ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-2015

         சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துறைக்கு உட்பட்ட
                           பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்


மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று 26மார்ச் 2015 மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காவல்துறை ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.பத்திரிக்கையாளர்கள்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் அமைப்பு பிரமுகர்கள்,மகளிர் அணியினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலும்,மனுக்களாகவும் கொடுத்தனர்.அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
    திரு.காவல் ஆய்வாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


            திரு.எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி.இ.கா.ப.அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை ஏற்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.பொதுமக்களிடம் குறை தீர்ப்பதற்கான  மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    திரு.எஸ்.மோகன் அவர்கள் காவல்துணை கண்காணிப்பாளர் சத்தி உட்கோட்டம் துவக்கவுரை நிகழ்த்தி மக்களின் நண்பன் காவல்துறை என நினைவுபடுத்தினார். மற்றும் சத்தி உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்துறை ஆய்வாளர்களின் அலைபேசி எண்களை அனைவருக்கும் அறிவித்து இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என விழிப்புரை ஆற்றினார்.


பொது மக்கள் நலன் கருதி
 அன்பன் 
  C.பரமேஸ்வரன்
 சத்தியமங்கலம்