Wednesday 5 November 2014

கலப்படத்திலிருந்து நம்மை காப்பது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
     

   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். கலப்படத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வது பற்றி காண்போம்.
 மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு?இதை எப்படி விவரிப்பது???..
அதனால்தாங்க,
(1)நாம் விழிப்பாக இருந்தால் மட்டுமே கலப்படத்தை ஒழிக்க முடியும்,
(2)நமது எச்சரிக்கையால் போலிகளை ஒழிக்க முடியும்..
(3)தரமான பொருட்களை நேர்மையான வணிகர்களிடம் வாங்க வேண்டும்.
(4)நேர்மையான வணிகர்களை தேர்வு செய்து பாராட்டுவிழா எடுக்க வேண்டும்.
(5)நுகர்வோர் மற்றும் வணிகர் இணைந்த கருத்தரங்கு நடத்தி விவாதிக்க வேண்டும்.
(6)உபயோகிப்பாளர்களே குழுவாக இணைந்து உற்பத்தியாளர்களிடம் நேரில் சென்று பொருட்களை வாங்கலாம்.
(7)அரசு நிர்வாகிக்கும் சிந்தாமணி போன்ற கூட்டுறவுக்கடைகளில் பொருட்களை வாங்கலாம்.
(8)பருவகாலங்களில் எளிதாக கிடைக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கலாம்.
(9)புதிய வணிக நிறுவனங்களை ஏற்படுத்தி நமக்குள்ளேயே வணிகம் செய்துகொள்ளலாம்.இதனால் நம் பகுதி இளைய சமூகத்திற்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
(10)பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் மாணவ,மாணவிகளுக்கு  கலப்படம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து மக்களிடையே பரப்பலாம்.
(11)அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு ஊக்கமளித்து கலப்படத்தின் தீமைகளை விளக்கிடவும்,உபயோகிப்பாளர்களை பாதுகாத்திடவும் உதவ கோரலாம்.
(12)நமக்கும் சமுதாயக்கடமை உணர்வு வேண்டும்.
(13)கண்கவரும் வண்ணங்களிலிருந்து விழிப்புணர்வு பெற்று உண்மைநிலை ஆராயவேண்டும். 
        விழிப்புணர்வு கட்டுரை  இன்னும் தொடரும்...
 என அன்பன்..
                  

No comments:

Post a Comment